பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க மாநகராட்சி ''மை ஷாப்பிங் மை பேக்'' திட்டம் அறிமுகம்.


கோவை மாவட்டத்தில் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் ''மை ஷாப்பிங் மை பேக்' என்ற புதிய அமைப்பு துவங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் முழுக் குறிக்கோள் பொதுமக்களிடம் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டைக் குறைத்து அதுகுறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே ஆகும்.

கோவை மாநகராட்சி, சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர் அமைப்புகள் ஆகியோர் இணைந்து துவங்கப்பட்டுள்ள இந்த அமைப்பு மக்களிடம் பிளாஸ்டிக் பைகள் குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகிறது. மேலும், எவ்வாறு பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கலாம் என்பதை விவாதிக்கும் வகையில் ஒரு வாட்ஸ்அப் குழுவும் துவங்கப்பட்டுள்ளது. 

மை ஷாப்பிங் மை பேக் அமைப்பின் எல்.டிம்பில் தலைமையில் துவங்கப்பட்டுள்ள இந்த வாட்ஸ்அப் குழுவில் பிளாஸ்டிக் பயன்பாட்டினை கட்டுப்படுத்துவது, அதனால் ஏற்படும் நன்மைகள், நோக்கம் உள்ளிட்டவை விவாதிக்கப்படும். 



இதுகுறித்து சித்ரா ரவீந்திரன் கூறுகையில், பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டைக் குறைக்க முதற்கட்டமாக வணிக நிறுவன உரிமையாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் வீட்டில் இருந்தே பைகளை எடுத்து வர உரிமையாளர்கள் வலியுறுத்த வேண்டும். இதற்கு அனைத்து நிறுவன உரிமையாளர்களும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றார்.

பி.கவிதா கூறுகையில், குடியிருப்பு பகுதியில் உள்ள தையலகக் கடைக்காரர்கள் இதற்கு ஆதரவளிக்க வேண்டும். பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து துணியினால் பைகளை செய்து விநியோகிக்க வேண்டும் என்றார்.

பிளாஸ்டிக் பயன்பாட்டினை ஒழிக்கும் இத்திட்டத்திற்கு கிருஷ்ணா கல்லூரி மாணவர்களும் தங்களது ஆதரவினைத் தெரிவித்துள்ளனர். அக்கல்லூரி மாணவர்களே துணியினால் தயாரிக்கப்பட்ட பையினை கடைகளுக்கு விநியோகித்து வருகின்றனர்.

மை ஷாப்பிங் மை பேக் அமைப்பின் சார்பில் அனைத்து வணிக வளாகங்களிலும் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி இதனை பின்தொடரும் வணிக நிறுவனம் குறித்து புள்ளிவிவரம் சேகரிக்கவும் அதனை மாநகராட்சியிடம் ஒப்படைக்கவும் திட்டமிட்டுள்ளது. அதன்படி வரும் நவம்பர் 10ம் தேதிக்குள் குறைந்தளவு நூறு நிறுவனத்திலாவது பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை முற்றிலும் தவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

மேலும், கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட கோவை வடக்கு, தெற்கு உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் தன்னார்வலர் அமைப்பிலிருந்து மொத்தம் 10 பேர் கொண்ட குழு தேர்வு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மை ஷாப்பிங் மை பேக் அமைப்புடன் இணைந்து ஒவ்வொரு பகுதியிலும் இதுகுறித்தான விழிப்புணர்வில் ஈடுபடுவர். இதுகுறித்து மேலும் தகவலுக்கு 94433 44731 என்ற தொலைபேசி எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...