பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க மாநகராட்சி ''மை ஷாப்பிங் மை பேக்'' திட்டம் அறிமுகம்.


கோவை மாவட்டத்தில் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் ''மை ஷாப்பிங் மை பேக்' என்ற புதிய அமைப்பு துவங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் முழுக் குறிக்கோள் பொதுமக்களிடம் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டைக் குறைத்து அதுகுறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே ஆகும்.

கோவை மாநகராட்சி, சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர் அமைப்புகள் ஆகியோர் இணைந்து துவங்கப்பட்டுள்ள இந்த அமைப்பு மக்களிடம் பிளாஸ்டிக் பைகள் குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகிறது. மேலும், எவ்வாறு பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கலாம் என்பதை விவாதிக்கும் வகையில் ஒரு வாட்ஸ்அப் குழுவும் துவங்கப்பட்டுள்ளது. 

மை ஷாப்பிங் மை பேக் அமைப்பின் எல்.டிம்பில் தலைமையில் துவங்கப்பட்டுள்ள இந்த வாட்ஸ்அப் குழுவில் பிளாஸ்டிக் பயன்பாட்டினை கட்டுப்படுத்துவது, அதனால் ஏற்படும் நன்மைகள், நோக்கம் உள்ளிட்டவை விவாதிக்கப்படும். 



இதுகுறித்து சித்ரா ரவீந்திரன் கூறுகையில், பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டைக் குறைக்க முதற்கட்டமாக வணிக நிறுவன உரிமையாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் வீட்டில் இருந்தே பைகளை எடுத்து வர உரிமையாளர்கள் வலியுறுத்த வேண்டும். இதற்கு அனைத்து நிறுவன உரிமையாளர்களும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றார்.

பி.கவிதா கூறுகையில், குடியிருப்பு பகுதியில் உள்ள தையலகக் கடைக்காரர்கள் இதற்கு ஆதரவளிக்க வேண்டும். பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து துணியினால் பைகளை செய்து விநியோகிக்க வேண்டும் என்றார்.

பிளாஸ்டிக் பயன்பாட்டினை ஒழிக்கும் இத்திட்டத்திற்கு கிருஷ்ணா கல்லூரி மாணவர்களும் தங்களது ஆதரவினைத் தெரிவித்துள்ளனர். அக்கல்லூரி மாணவர்களே துணியினால் தயாரிக்கப்பட்ட பையினை கடைகளுக்கு விநியோகித்து வருகின்றனர்.

மை ஷாப்பிங் மை பேக் அமைப்பின் சார்பில் அனைத்து வணிக வளாகங்களிலும் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி இதனை பின்தொடரும் வணிக நிறுவனம் குறித்து புள்ளிவிவரம் சேகரிக்கவும் அதனை மாநகராட்சியிடம் ஒப்படைக்கவும் திட்டமிட்டுள்ளது. அதன்படி வரும் நவம்பர் 10ம் தேதிக்குள் குறைந்தளவு நூறு நிறுவனத்திலாவது பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை முற்றிலும் தவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

மேலும், கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட கோவை வடக்கு, தெற்கு உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் தன்னார்வலர் அமைப்பிலிருந்து மொத்தம் 10 பேர் கொண்ட குழு தேர்வு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மை ஷாப்பிங் மை பேக் அமைப்புடன் இணைந்து ஒவ்வொரு பகுதியிலும் இதுகுறித்தான விழிப்புணர்வில் ஈடுபடுவர். இதுகுறித்து மேலும் தகவலுக்கு 94433 44731 என்ற தொலைபேசி எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...