பொது சிவில் சட்டத்தை எதிர்த்து நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் ஆர்ப்பாட்டம்


தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் சார்பில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த நினைக்கும் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர் உபைதா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் மாநில தலைவர் சர்மிளா பேசுகையில்; இந்திய அரசியலமைப்பின் சட்டத்தின் 25ம் பிரிவு இந்தியாவில் வாழும் அனைத்து மக்களுக்கும் தங்கள் விரும்பிய மதத்தை பின்பற்றவும், நடைமுறைபடுத்தவும், பரப்பவும் உரிமை அளித்துள்ளது. இந்நிலையில், தற்போது ஆட்சி செய்யக்கூடிய மத்திய அரசு முஸ்லீம்கள் பின்பற்றும் ஷரீஅத் சட்டத்தை பின்பற்றுவதை தடுத்து பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. இந்த முயற்சி முஸ்லீம் மற்றும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான போர் என அவர் தெரிவித்தார். 

இதில், நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் தேசிய செயற்குழு உறுப்பினர் நஷீமா, விமன்ஸ் இந்தியா மூவ்மெண்ட் மாநில பொதுச் செயலாளர் பர்ஜானா மற்றும் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.



Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...