நாட்டில் வேறு விவகாரங்கள் இல்லாததால் முன்னாள் இராணுவத்தினர் விவகாரத்தை வைத்து காங்கிரஸ் அரசியல் செய்வதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் குற்றம்சாட்டியுள்ளார்

கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விமானம் மூலம் வருகை தந்தார். அங்கு அவருக்கு பா.ஜ.கவினர் செண்டை மேளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியளர்களிடம் பேசிய அவர் கோவையில் கல்வி தொடர்பாக நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்க வந்திருப்பதாகவும் சென்னையிலும் ஓரு நிகழ்வில் பங்கேற்க இருப்பதாகவும் தெரிவித்தார். அனைவருக்கும் தரமான கல்வி என்பதே பா.ஜ.க வின் கொள்கை எனக்கூறிய அவர் அனைவருக்கும் தரமான கல்வியை வழங்குவது தொடர்பாக தமிழக கல்விதுறை உள்ளிட்ட அனைத்து மாநில கல்வி துறை அமைச்சர்களுடன் கலந்தாலோசித்து வருவதாகவும் தெரிவித்தார்.

ஓரே பதவி ஓரே ஒய்வூதியம் என்ற முன்னாள் இராணுவத்தினரின் கோரிக்கையை  40 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி நிராகரித்தாக குற்றம்சாட்டிய அவர் ஆனால் பா.ஜ.க அரசு இந்த திட்டதிற்கு 6500 கோடி ஓதுக்கி இருப்பதாகவும் கூறினார். நாட்டில் வேறு விவகாரங்களை எழுப்ப முடியாது என்பதால் இந்த விவகாரத்தை எதிர்கட்சிகள் அரசியல் செய்வதாகவும் ஜவடேகர் குற்றம்சாட்டினார்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...