ஆட்டோ டிரைவரிடம் கத்தியை காட்டி பணம் பறித்தவர் கைது

மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (20). ஆட்டோ ஓட்டுனர். இவர் நேற்று காலை, கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள உணவகம் ஒன்றில் சாப்பிட சென்றார். அப்போது, அங்கு வந்த வாலிபர் கத்தியை காட்டி மிரட்டியதோடு, சரவணன் வைத்திருந்த 11 ஆயிரம் பணம் மற்றும் செல்போனை திருடிக்கொண்டு ஓட முயன்றார்.

சரவணன் கூச்சலிடவே, அப்பகுதி மக்கள், வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் மேட்டுப்பாளையம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், மேட்டுப்பாளையம் காட்டூர் பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார் என்பதும், இவர் மீது செயின்பறிப்பு, வழிப்பறி உட்பட 9 க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதும் தெரிவந்தது. தொடர்ந்து, அவர் மீது வழக்கு பதிந்த போலீசார், கைது செய்து சிறையிலடைத்தனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...