தமிழக அரசு சட்டமன்ற நிலைக்குழுக்களை அமைப்பதில் தாமதம் காட்டுவது ஏன்? - ஜி.கே.வாசன்


தமிழக அரசு சட்டமன்ற நிலைக்குழுக்களை அமைப்பதில் தாமதம் காட்டுவது ஏன் என்று கேள்வியெழுப்பியுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதிகம் உள்ள காரணத்தால் தான் தாமதிக்கிறதா என விளக்கமளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு விமானம் மூலம் டெல்லி சென்றார். முன்னதாக, கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்,



''காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மறுப்பு தெரிவிக்கிறது, கர்நாடக அரசும் தண்ணீர் திறந்துவிட தொடர்ந்து மறுத்து வருகிறது. இதனால், டெல்டா மாவட்ட விவசாயிகள் மூன்று பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்கொலைகளை தடுக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் மற்றும் மானாவரி நிலத்திற்கு சேத அடிப்படையில் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். தமிழக மீனவர் பிரச்சனைக்கு ஆக்கப்பூர்வமான முடிவு எட்டப்படாதது வருத்தமளிக்கிறது. கச்சத்தீவை கைப்பற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இதேப்போல், சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள அரசின் திட்டத்திற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் நிரந்தர தடை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரள கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவதை தடுக்க உள்ளாட்சி அமைப்புகளை காவல்துறையினர் உதவியுடன் கண்காணிக்க வேண்டும். மேலும், பாதுகாப்பான முறையில் ஜல்லிக்கட்டு நடத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு தமிழக அமைச்சர்கள் பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும். தமிழக அரசு சட்டமன்ற நிலைக்குழுக்களை அமைப்பதில் தாமதம் காட்டுவது ஏன் ?. எதிர்க் கட்சி உறுப்பினர்கள் அதிகம் உள்ள காரணத்தால் தான் தாமதிக்கிறதா என விளக்கமளிக்க வேண்டும்'' என்றார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...