அமெரிக்க அதிபர் வேட்பாளர் டிரம்ப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் : மேடை முன் துப்பாக்கியுடன் மர்ம நபர் இருந்ததால் பரபரப்பு

பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதால் அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்பை பாதுகாவலர்கள் பாதுகாப்பாக கூட்டத்திலிருந்து வெளியேற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் டிரம்ப் ஈடுபட்டிருந்த போது, குடியரசுக் கட்சி வேட்பாளர் டிரம்ப் முன் மர்ம நபர் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் காணப்பட்டார். இதனை கவனித்த பாதுகாவலர்கள் அதிரடியாக செயல்பட்டு மர்ம நபரை தூக்கிச் சென்றனர். பாதுகாப்பை உறுதிப்படுத்த டிரம்பையும் மேடைக்கு பின்புறம் அழைத்து சென்றனர். 



இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மர்மநபர் வெளியேற்றப்பட்ட பிறகு பிரச்சார மேடைக்கு திரும்பிய டிரம்ப், எந்தவிதமான மிரட்டலுக்கும் தாம் அடிபணிய போவதில்லை என்றார். தமது பயணம் திட்டமிட்டப்படி தொடரும் என்றார். மேலும் பேசிய அவர் எங்களுக்கு வெற்றி எளிதாக கிடைத்துவிடும் என யாரும் கூற முடியாது என்றார். எனது பயணத்தை யாராலும் தடுக்க முடியாது என்றார். நாளை மறுநாள் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதுவரை வெளியான கருத்து கணிப்புகளில் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

Newsletter

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...