ரூ.9.15 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்ட மாநகராட்சி - ஆணையர் தகவல்

கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களிலுள்ள மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.9.15 கோடி மதிப்பிலான 1.18 ஏக்கர் அளவிலான இடங்கள் மீட்கப்பட்டு மாநகராட்சியின் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் தெரிவிக்கையில், 

''கோவை மாநகராட்சியிலுள்ள ஐந்து மண்டலங்களான கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்தியம் ஆகிய வார்டு பகுதிகளிலுள்ள மாநகராட்சி பொது ஒதுக்கீட்டு இடங்களை உதவி நகரமைப்பு அலுவலர்கள் மூலம் இடங்களை கண்டறிந்து, விரைவில் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில், முதற்கட்டமாக ஞாயிறன்று (இன்று) வரை மாநகராட்சியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ரூ.9.15 கோடி மதிப்பிலான 1.18 ஏக்கர் பொது ஒதுக்கீடு இடங்கள் மீட்கப்பட்டு மாநகராட்சியின் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியின் மேற்கு மண்டலம், வார்டு 6-ல் கவுண்டம்பாளையம், ராமகிருஷ்ணா நகரில் விளையாட்டு மைதானமாக ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான 29 சென்ட் அளவிலான இடங்களும், மத்திய மண்டலம், வார்டு 51-ல் காந்திபுரம், 100-அடி சாலை, 8-வது தெருவில் சிவா கார்ஸ் என்னும் பழைய நான்கு சக்கர வாகனம் விற்கும் இடமாக உள்ள ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான 2 சென்ட் அளவிலான இடங்களும் மீட்கப்பட்டன.



இதேபோன்று, கிழக்கு மண்டலம், வார்டு 36-ல் காளப்பட்டி, சிவா நகரில் கோவில் நிளமாக ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.95 லட்சம் மதிப்பிலான 14.5 சென்ட் அளவிலான இடங்களும், வடக்கு மண்டலம், வார்டு 28-ல் சரவணம்பட்டி, சங்கரா நகரில் குடிசைகள் அமைத்து ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான 31 சென்ட் அளவிலான இடங்களும் மீட்கப்பட்டது.





இதனைத்தொடர்ந்து, தெற்கு மண்டலம், வார்டு 91-ல் காயத்திரி நகரில் சாலை ஓரங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.4.2 கோடி மதிப்பிலான 42 சென்ட் அளவிலான இடங்களும் என மொத்தம் சுமார் ரூ.9.15 கோடி மதிப்பிலான 1.18 ஏக்கர் அளவிலான மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் மீட்கப்பட்டு மாநகராட்சியின் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.



மேலும், இதுபோன்ற ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் தொடர்ந்து மீட்கப்படும்.'' என தெரிவித்தார்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...