இந்திய விமானப் படையின் சார்பில் இந்துஸ்தான் கல்லூரியில் கண்காட்சி நிகழ்ச்சி


இந்திய விமானப் படையின் சார்பல் "தி கார்டியன்ஸ் ஆப் தி ஸ்கை" என்ற கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவையில் அமைந்துள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில், இந்திய விமானப் படையில் ஆட்கள் தேர்வு முறை, அதில் சேர்வதற்கான வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 



இதனைத்தொடர்ந்து, விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மண்டலம், அனுபவம் மற்றும் தகவல் மண்டலம் உள்ளிட்டவை குறித்து மாணவர்களுக்கு செய்முறை விளக்கம் காண்பிக்கப்பட்டது. இதுகுறித்து விங் கமேண்டர் சங்கீதா நமது நிருபரிடம் கூறியதாவது:-

இந்நிகழ்ச்சி நடத்தியதற்கான முக்கிய நோக்கம் மாணவ, மாணவிகளிடையே இந்திய விமானப்படையின் மீதுள்ள ஆர்வத்தை தூண்டவும், ஊக்குவிப்பதுமாகும். இதுகுறித்த முழுமையான விழிப்புணர்வை அவர்களிடம் ஏற்படுத்த வேண்டும். அனைத்துத் தரப்பினரிடமும் இதனைக் கொண்டுசேர்க்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.



இதைத்தொடர்ந்து, மாணவர்கள், விமானப் படையில் சேர்வதற்கான தேர்வு முறைகள், தகுதி, விதிமுறைகள் உள்ளிட்டவை குறித்து கேட்டுத் தெரிந்துகொண்டனர். பின், இந்திய விமானப் படையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விமானப் போக்குவரத்து உள்ளிட்டவை அடங்கிய பேருந்தினை பார்வையிட்டனர். இதில், விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டுக் கருவி, உபகரணம், மேற்கொள்ளும் வழிமுறைகள் உள்ளிட்டவைகள் கண்காட்சிப் படுத்தப்பட்டன.படுத்தப்பட்டன. 



இதனைத்தொடர்ந்து அருகில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் இந்திய விமானப் படையின் கண்காட்சி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், இந்த கண்காட்சி மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. இதன் மூலம் விமானப் படையில் சேர்வதற்கான ஊக்கம் ஏற்பட்டுள்ளது. கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த விமானக் கட்டுப்பாட்டுக் கருவிகளை இயக்கியது நல்ல அனுபவத்தை ஏற்படுத்தியது என்றனர்.



இந்நிகழ்ச்சியில், விமானப்படை நிர்வாகக் கல்லூரி ஏர் விங் கமேன்டர் பி.கனேசன், அணித் தலைவர் கல்பனா குமாரி, பெங்களுரில் இருந்து அணித் தலைவர் நிசாந்த் தீக்சித், விமானப்படை நிர்வாகக் கல்லூரி இளைஞர் வாரண்ட் அதிகாரி சாகு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...

FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தர...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...