அரசுப் பேருந்து மோதி பெண் பலி

கோவை பாலக்காடு மெயின் ரோடு பகுதியில் உணவு விடுதி நடத்தி வருபவர் முனிராஜ். இவரது மனைவி புவனேஷ்வரி. செவ்வாயன்று (இன்று) காலை பொருட்கள் வாங்குவதற்காக புவனேஷ்வரி, தனது அண்ணன் மகன் மோகன்தாஸுடன் இரு சக்கர வாகனத்தில் குனியமுத்தூர் அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக இவர்களுக்கு பின்னால் வந்துகொண்டிருந்த அரசுப் பேருந்து எதிர்பாராத விதமாக இவர்களின் வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் நிலை தடுமாறி புவனேஷ்வரி கீழே விழுந்த நிலையில் பேருந்தின் பின் சக்கரம் இவர் மீது ஏறி சம்பவ இடத்திலேயே பலியானார். 

இதுகுறித்து அரசுப் பேருந்து ஓட்டுநர் ரமேஷ் மீது மேற்கு போக்குவரத்து புலனாய்வு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போக்குவரத்து அதிகம் உள்ள பகுதியில் அரசு பேருந்து மோதி பெண் இறந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ''மாநகராட்சியின் சார்பில் பாதாளச் சாக்கடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலைகள் குறுகிய சாலை என்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், அதிவேகமாக வரும் வாகனங்களால் இவ்வாறான விபத்துகள் தொடர்ந்து ஏற்படுகிறது. இதுகுறித்து, காவல் துறையினர் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும்'' என்றனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...