இந்திய விமானத் துறையின் சார்பில் லஞ்ச ஒழிப்பு வார விழா

ஏர்ப்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியாவின் சார்பில் கோவை மாவட்டத்தில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்பட்டது. கடந்த அக்டோபர் 31ம் தேதி முதல் நவம்பர் 5ம் தேதி வரை கோவை விமான நிலையத்தில் கடைபிடிக்கப்பட்ட இந்த விழாவில் கோவை மாவட்ட துணை காவல் ஆணையர் கே.சுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

இந்நிகழ்ச்சியில், லஞ்ச ஒழிப்பை முன்னிட்டு கட்டுரைப் போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், கோவையில் அமைந்துள்ள கேந்திரிய வித்யாலயா, சுகுனா பிப் பள்ளி, கே.சி.டி, ஜிஆர்டி கலை அறிவியல் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்து பெருந்திரளான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இப்போட்டிகளில் விமான நிலைய ஊழியர்களும் பங்கேற்றனர்.



இதனைத்தொடர்ந்து, இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்ற பரிசுகள் வழங்கும் விழாவில் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

இதனிடையே, மாணவ, மாணவிகள் ஓவியப் போட்டியில் பங்கேற்றபோது வரையப்பட்ட ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டது. இதனை, கோவை மாவட்ட துணை காவல் ஆணையர் கே.சுந்தரராஜன் திறந்து வைத்து பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில், விமான நிலைய இயக்குநர் ஜி.பிரகாஷ் ரெட்டி, ஜெஜிஎம் (ஏடிஎம்) வி.பிரதீப் குமார், டிஜிஎம் (சிவில்) ஆர்.குல்ஸ்ரெஸ்தா உள்ளிட்ட அனைத்துறை தலைவர்களும் பங்கேற்றனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...