கேஎம்சிஎச் சிட்டி சென்டர் நடத்தும் இலவச ஆக்குபேஷனல் தெரபி மற்றும் மருத்துவ ஆலோசனை முகாம்


கேஎம்சிஎச்-யின் ஒரு சிறப்பு பிரிவான ஆக்குபேஷனல் தெரபி சிகிச்சை துறையின் சார்பாக உலக ஆக்குபேஷனல் தெரபி தினத்தை முன்னிட்டு இலவச ஆக்குபேஷனல் தெரபி முகாம் நடத்தப்பட உள்ளது.

வரும் நவம்பர் மாதம் 12 மற்றும் 13-ம் தேதிகளில் கேஎம்சிஎச் சிட்டி சென்டர், ராம் நகரில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ள இந்த இலவச முகாமில் கேஎம்சிஎச் ஆக்குபேஷனல் தெரபி துறையின் அனுபவமிக்க மருத்துவர்களால் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு இலவச ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது. 

ஆக்குபேஷனல் தெரபி துறையானது உடல், மூளை மற்றும் மன வளர்ச்சி தொடர்புடைய பாதிப்புகளான கற்றலில் ஏற்படும் குறைபாடு, மூளை முடக்குவாதம், தசைவளக்கேடு, கை, கால் வலிப்பு நோய், மனவளர்ச்சி குறைபாடு மற்றும் மனநலிவு நோய் போன்ற பாதிப்புகளால் சிரமப்படும் குழந்தைகள் முதல், மூளை, தண்டுவட முடக்கு நோய், பக்கவாதம், தலைக் காயம், பார்கின்சன் நோய், கை, கால் நரம்பு பாதிப்பு, டிமென்ஷியா என்ற மறதிநோய் பாதிப்புகளாலும், மனநோய்களால் அவதிப்படும் பெரியவர்கள் வரை மறுவாழ்வு மருத்துவ சிகிச்சை அளிக்கும் சிறப்பு பெற்ற துறை ஆகும். 

எனவே குழந்தைகள், அவர்களின் பெற்றோர் மற்றும் பெரியவர்கள் இந்த இலவச ஆக்குபேஷனல் தெரபி மருத்துவ ஆலோசனை முகாமில் பங்கு பெற்று பயனடைந்துகொள்ளலாம் என கேஎம்சிஎச் மருத்துவமனையின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...