கோவை அரசு மருத்துவமனையில் பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கடத்தல்


கோவை அரசு மருத்துவமனையில் பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை 5 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சிங்கநல்லூர் வரதராஜபுரம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜன், ஜோதி தம்பதிகளுக்கு கடந்த 8 ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் அழகான பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து ஜோதி அரசு மருத்துவமனையில் உள்ள பிரசவத்திற்கு பிந்தைய வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவருடன் ஈரோடு பகுதியை சேர்ந்தவர் எனக்கூறி அர்ச்சனா என்பவரும் வார்டில் இருந்து வந்துள்ளார். தனது குழந்தை ஐசியூ வார்டில் இருப்பதாக அர்ச்சனா கூறி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் இன்று மதியம் 1 மணியளவில் மருத்துவரை பார்க்க சென்ற ஜோதி தனது குழந்தையை பார்த்துக்கொள்ளுமாறு அருகில் இருந்த அர்ச்சனாவிடம் கூறிச்சென்றுள்ளார். திரும்ப வந்து பார்த்த போது அர்ச்சனாவும் குழந்தையும் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஜோதி இது தொடர்பாக மருத்துவமனை அதிகாரிகள் மூலம் காவல்துறையில் புகார் அளித்தார்.

இதையடுத்து காவல்துறையினர் சிசிடிவி பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 3 பெண்கள் உட்பட 5 பேர் வாடகை கார் ஒன்றில் குழந்தையுடன் கிளம்பி செல்லும் காட்சிகள் பதிவாகியிருப்பதால் குழந்தையுடன் மாயமானவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...