ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்து தருவதாகக் கூறி பெண்ணிடம் நூதன மோசடி- வாலிபர் கைது


கோவை மாவட்டம், பி.என்.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் புகழேந்தி. இவரது மனைவி ஜோதி (42) கடந்த மாதம் 22ம் தேதியன்று கிராஸ்கட் சாலையில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம் மையத்திற்குச் சென்று பணம் எடுக்க முயன்றுள்ளார். அப்போது பணம் வராதநிலையில், அருகில் இருந்த இளைஞர் உதவுவதாகக் கூறி ஜோதியின் ஏடிஎம் அட்டையினை பயன்படுத்தி ஒரு தொகையினை எடுத்து கொடுத்துள்ளார். பின், ஜோதியின் ஏடிஎம் அட்டைக்கு பதிலாக தான் கொண்டுவந்திருந்த போலி ஏடிஎம் அட்டையினை கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

இந்நிலையில், ஜோதியின் கைபேசிக்கு ஏடிஎம் மையத்தில் இருந்து ரூ.30 ஆயிரம் எடுத்திருப்பதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. அதிர்ச்சியடைந்த அவர் வங்கிக்கு சென்று விசாரித்தபோது, அந்த நபர் போலி அட்டை கொடுத்து ஏமாற்றியிருப்பது தெரியவந்துள்ளது. உடனடியாக, காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத்தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, அந்த ஏடிஎம் அட்டை கடைசியாக பயன்படுத்தப்பட்ட பகுதியினைக் கொண்டு இந்த நூதனமோசடியில் ஈடுபட்டவரை பிடித்தனர். இதனைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், அவரது பெயர் செந்தில்குமார் (32) என்பதும், ஆனைமலை அடுத்த தெற்குத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரிவந்துள்ளது. இதைத்தொடர்ந்து காவல் துறையினர் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...