ரூ.40 ஆயிரம் கேட்டு இளைஞரைக் கடத்திய கும்பலை காவல்துறை கைதுசெய்து விசாரணை


கோவை மாவட்டம், பீளமேடு பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். அதேப்பகுதியில் செயல்படும் தனியார் பொறியியல் கல்லூரியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் விஷ்ணு, அதேக் கல்லூரியில் உணவு விடுதியில் பணியாற்றி வருகிறார். 

இந்நிலையில், வியாழனன்று மாலை பணி முடிந்து தனித்தனி வாகனத்தில் இருவரும் வீட்டிற்கு திரும்பியுள்ளனர். சண்முகம் வீட்டிற்கு வந்துவிட்ட நிலையில், விஷ்ணு நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனிடையே, மர்ம நபர்களிடம் இருந்து தொலைபேசியில் அழைப்பு வந்துள்ளது. அப்போது அவர்கள், விஷ்ணுவை கடத்தியிருப்பதாகவும், 40 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் இல்லையென்றால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டியுள்ளனர். அதற்கு நாளை அந்தப் பணத்தினை தந்துவிடுவதாக சண்முகம் கூறியுள்ளார். தொடர்ந்து, பீளமேடு காவல் துறையினருக்கும் ரகசியத் தகவல் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, இன்று மர்ம கும்பல் கூறிய இடத்திற்கு சண்முகம் சென்றார். காவல் துறையினரும் பின்தொடர்ந்து சென்றுள்ளனர். காவலர்களைக் கண்ட மர்மகும்பல் விஷ்ணுவை காரில் இருந்து கீழே தள்ளிவிட்டு தப்பிச் சென்றனர். இதையடுத்து, விஷ்ணு கூறிய அடையாளம் மற்றும் ஆதாரத்தின் அடிப்படையில் காவல் துறையினர் 5 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ள வீடியோப் பதிவையும் சோதனையிட்டு வருகின்றனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...