செம்மர கடத்தலில் ஈடுபட்ட சென்னை பெண் வீட்டில் ரூ.50 கோடி நகை-பணம் பறிமுதல்


சென்னையைச் சேர்ந்த லட்சுமணன் என்பவரை செம்மரக்கடத்தலில் ஈடுபட்டதாக சித்தூர் போலீசார் கைது செய்தனர்.

அவர், சித்தூர் மாவட்ட வனப் பகுதிகளில் இருந்து செம்மரங்களை கடத்தி சீனா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்குக் கடத்தி வந்ததாக கூறினார்.

அவரை, சித்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடப்பா மத்திய சிறையில் அடைத்தனர்.

அவர், சிறையில் இருந்தபடியே 2-வது மனைவி சங்கீதா (32) மூலமாக சர்வதேச அளவில் செம்மரக்கடத்தலில் ஈடுபடுவது தெரிய வந்தது. சங்கீதாவை பிடிக்க சித்தூர் போலீசார் ஒரு சிறப்புக்குழுவை அமைத்தனர். அவர்கள் சென்னை உள்பட பல்வேறு இடங்களில் சங்கீதாவை தேடினர்.

சங்கீதா, கொல்கத்தாவில் பதுங்கியிருப்பதாக தகவல்கள் கிடைத்தது. சித்தூர் சிறப்புப்படை போலீசார் கொல்கத்தா சென்று சங்கீதாவை பிடிக்க முயன்றனர். இதை அறிந்த சங்கீதா வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாகி விட்டார்.

அவரது வீட்டில் போலீசார் சோதனை செய்தனர். அங்கு ரூ.50 கோடிக்கும் மேலான தங்க நகைகள், கட்டுக்கட்டாக பணம் இருந்தது தெரிய வந்தது.

அவற்றை போலீசார் பறிமுதல் செய்து சித்தூருக்குக் கொண்டு வந்தனர். சங்கீதாவுக்கு துணையாக லட்சுமணனின் தம்பி ரமேஷ் (36) தங்கியிருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

ரமேஷ் உதவியோடு சங்கீதா சர்வதேச அளவில் செம்மரக்கடத்தலில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. தலைமறைவான சங்கீதா, ரமேஷ் ஆகியோரை சித்தூர் சிறப்புப் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...