உலக நீரிழிவு தினம் முன்னிட்டு கே.எம்.சி.எச் மருத்துவமனை சிறப்பு முகாம்

உலக நீரிழிவு தினமானது, சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பின் தலைமையில் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 14-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. உலகம் முழுக்க 415 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயுடன் வாழ்கிறார்கள். கடந்த 2015-ம் ஆண்டு அறிக்கையின்படி 5,42,000 சிறுவர், சிறுமியர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, இந்த நீரிழிவு நோய் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில், கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் மருத்துவமனை இந்நோய் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வை 12.11.2016 அன்று கோவை ரேஸ்கோர்ஸ்-ல் நடத்தியது. இதில் அப்பகுதியைச் சார்ந்த மக்களுக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவு இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டது. இதன் மற்றொரு அங்கமாக நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இலவச ஆலோசனைகள் மற்றும் சிகிச்சை முறைகள் பற்றி மருத்துவர்களால் விவரிக்கப்பட்டது. மருத்துவர்கள் சிவஞானம், கிருஷ்ணன் ஸ்வாமிநாதன், வேலாயுதம் ஆகியோர் விளக்கமளித்தனர்.



இம்முகாமினை கோவை மாவட்ட கலெக்டர் ஹரிஹரன்  துவக்கி வைத்தார். இம்முகாமில் 400-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். பொது மக்கள் பயன்பெறும் வகையில் இவ்வாறான விழிப்புணர்வு முகாம்களை கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் மருத்துவமனை தொடர்ந்து நடத்தும் என மருத்துவமனையின் தலைவர் நல்லா ஜி. பழனிசாமி தெரிவித்தார்.



Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...