சுண்டக்கமுத்தூர் குளத்தில் லாரியில் கடத்தப்படும் மண்ணை சிறைபிடித்த பொதுமக்கள்!

சுண்டக்கமுத்தூர் பகுதியில் உள்ள குளத்தின் மண்ணை கவுண்டனுர் பகுதிக்கு தடுப்பனைக்காக எனக் கூறி கடத்தப்படுவதை, அப்பகுதி மக்கள் இன்று லாரியுடன் சிறைபிடித்தனர்.



இது தொடர்பாக அப்பகுதி பாஜக உறுப்பினர் திருநாவுக்கரசர் கூறுகையில், பேரூர் வட்டம் சுண்டக்கமுத்தூர் பகுதியில் உள்ள குளத்தில் வடகிழக்கு பருவமழையின் மூலம் வெள்ள பாதிப்பை தடுக்கும் விதமாகவும், வெள்ளத்தினால் பாதிப்படையும் பகுதிகளை பாதுகாக்கவும், குளத்திற்கு மழைநீர் வரும் வாய்காலினையும் அமைத்தும் உடனடியாக தூர்வாரி சுத்தம் செய்து தருமாறும், மேலும்  இக்குளத்தை சுற்றியுள்ள பகுதியில் விவசாய நிலங்களும் உள்ளதால், குளத்தை தூர்வாருவதற்கு  கடந்த மாதம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. இதன் காரணமாக  இப்பகுதியில் பேரிடர் மீட்புக் குழு அமைக்கப்பட்டது. இது தொடர்பாக மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கு தாசில்தாரை சந்தித்த போது, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலமாக இக்குளம் சரிசெய்யப்படும் என அவர் கூறினார்.



இதனையடுத்து, அப்பகுதியில் குளம் தூர்வாரப்படாமல் இருந்துவந்தது, மேலும் கவுண்டனூர் பகுதியில் தடுப்பணை அமைப்பதற்காக இக்குளத்தில் இருந்து மண் எடுப்பதற்கு தாசில்தார் அனுமதியளித்தார். இதன் மூலம் தற்போது கடந்த நவம்பர்  5ம் தேதி முதல் இக்குளத்தில் உள்ள மண்ணினை ஒரு தனியார் லாரி சர்வீஸ் மண் எடுத்து வருகின்றனர். தினமும் 10 லாரிகளின் மூலம் மண் அள்ளப்படுவதை, கண்டு அப்பகுதிமக்கள் சந்தேகம் அடைந்தனர். பின்னர் கவுண்டனூர் பகுதிக்கு இக்குளத்தில் எடுக்கப்படும் மண் நிறுத்தப்பட்டுள்ளதை அறிந்த மக்கள் இது குறித்து தாசில்தாரிடம் கேட்டபோது, லாரி சர்வீஸ் ஒப்பந்தத்தை மீறி மண்ணை வெளியில் விற்று வருவது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அப்பகுதிக்கு மக்கள் இன்று மதியம் இப்பகுதியில் இருந்து கடத்தப்படும் மண் லாரியை சிறைபிடித்தனர். இவ்வாறு அவர் கூறினார்.



பின்னர், குறித்து தகவலை ஊர் பொதுமக்களின் கையெழுத்தின் மூலம் பேரூர் காவல்நிலையத்திலும், தாசில்தரிடமும் புகார் தெரிவித்தனர். தகவல் அறிந்த தாசில்தார் லாரியினை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...