பெண் உதவி பேராசிரியரிடம் 12 பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு


கோவை சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் காசிராஜன். இவரது மனைவி பிரதீபா (32). தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் உதவி பேராசிரியராக பணிபுரிகிறார். நேற்று இரவு பிரதீபா மற்றும் அவரது சகோதரி கிருத்திகா ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றனர். சின்னியம்பாளையம் பேருந்து  நிலையம் அருகே சென்றபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர், பிரதீபா கழுத்தில் அணிந்திருந்த 12 பவுன் தாலி சங்கிலையை பறித்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கூச்சலிடவே அருகிலிருந்த பொது மக்கள், கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை விரட்டினர். ஆனால், அதற்குள் அவர்கள் இருவரும் அதிவேகமாக தப்பிச்சென்றனர். இது குறித்து பிரதீபா பீளமேடு போலீசாரிடம் புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...