நாசிக் அச்சகத்தில் இருந்து 50 லட்சம் புதிய ரூ.500 நோட்டுகள்

மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் அச்சகத்தில் 50 லட்சம் புதிய ரூ.500 நோட்டுக்கள் அச்சிடப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ரூ.500, 1,000 நோட்டுக்களை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு நவ., 8 ம் தேதி அறிவித்ததை அடுத்து, நாடு முழுவதும் அன்றாட செலவுகளுக்கான பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏடிஎம்.,களில் பணம் எடுக்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். மக்களின் இந்த சிரமத்தை குறைக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ரிசர்வ் வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், ‛மகாராஷ்டிரா மாநிலம், நாசிக்கில் உள்ள கரன்சி நோட்டு அச்சகத்தில் இருந்து 50 லட்சம் புதிய ரூ.500 நோட்டுக்கள் அச்சடித்து, வங்கிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் 50 லட்சம் நோட்டுக்கள் நவ., 16ம் தேதி விநியோகத்திற்கு அனுப்பப்பட உள்ளன' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாட்டில் உள்ள ரூபாய் நோட்டு அச்சடிக்கும் ஒன்பது அச்சகங்களில் நாசிக் அச்சகமும் ஒன்று. இங்கு ரூ.20, 50, 100 நோட்டுக்களும் அதிக அளவில் அச்சிடப்பட்டு வருகிறது. அரசு புதிதாக அறிமுகப்படுத்திய ரூ.2,000 நோட்டுக்கள் மட்டுமே இதுவரை புழக்கத்திற்கு வந்துள்ளன. புதிய ரூ.500 நோட்டுக்களும் தங்குதடையின்றி கிடைப்பதற்காக அதிக அளவில் அச்சிடப்பட்டு வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...