துப்பாக்கி விற்றவர் மீது வழக்கு பதிவு செய்ய ஜெர்மனி ஆய்வு

கடந்த ஜூலை மாதத்தில் ஒன்பது பேரை கொலை செய்ய பயன்படுத்திய துப்பாக்கியை 18 வயது இளைஞருக்கு விற்பனை செய்ததற்காக ஜெர்மனியிலுள்ள ஓர் ஆயுத விற்பனையாளரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

பிலிப்பி கே என்ற அந்த சந்தேக நபர் அவருடைய மெத்தனத்தால் கொலைக்கு காரணமாகிவிட்டதாக குற்றஞ்சாட்டுவதற்கு அரச தரப்பு வழங்கறிஞர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இதனால் அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கலாம்.

இரகசிய இணையதளத்தின் மூலம் துப்பாக்கிதாரி டேவிட் சோன்போலி இந்த துப்பாக்கியை வாங்கியிருக்கிறார். ஆனால், பொதுவாக ஆயுத விற்பனையாளர் தனிப்பட்ட முறையில் அந்நபரை சந்தித்து தான் அதனை வழங்குவார்.

இந்த துப்பாக்கிதாரியின் நோக்கத்தை ஆயுதம் விற்றவர் கணித்திருக்க முடியும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

ஜெர்மனி மற்றும் இரான் என இரு குடியுரிமை கொண்டசோன்போலி மெக்டோனல் உணவகத்தில் எவ்வித நோக்கமுமின்றி துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

பின்னர், வணிக வளாகம் ஒன்றில் பொருட்களை வாங்க வந்திருந்தோர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி தன்னைதானே சுட்டு உயிரிழந்தார்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...