மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கூட்டுறவு வங்கிகளுக்கு பணம் வழங்காத மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு கூட்டுறவு வங்கி பணியாளர்கள் கோவை தலைமை அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். பணம் வழங்காததால் கூட்டுறவு வங்கிகள் மேல் விவசாயிகளுக்கு உள்ள நம்பிக்கை குறைய வாய்ப்பு உள்ளதாக குற்றம் சாட்டி உள்ளனர்.



தமிழக அரசு கட்டுப்பாட்டில் தமிழகம் முழுவதும் நான்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூட்டுறவு வங்கிகள் இயங்கப்பட்டு வருகிறது, கோவை மாவட்டத்தை பொருத்தவரை 276 கூட்டுறவு வங்கிகள் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிகளில் பெரும்பாலும் கிராமப்புற விவசாயிகளே அதிக பயனாளர்களாக உள்ளனர். இந்நிலையில் கடந்த 9ம் தேதி முதல் 500-1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதனால் மாநில அரசின் கீழ் இயங்கி வரும் கூட்டுறவு வங்கிகள் மத்திய வங்கியில் செலுத்திய பணத்தை மீண்டும் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் கூட்டுறவு வங்கிகளில் பணம் செலுத்திய விவசாயிகள் பணத்தை எடுக்க முடியாமலும், விவசாய நகை கடன், உள்ளிட்ட கடன்களை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. போதுமான அளவு பெரிய தொகை வழங்க முடியாது என மத்திய வங்கி தெரிவித்துள்ளதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாகவும், இதனால் உடனடியாக கூட்டுறவு வங்கி செலுத்திய பணத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர் சங்கத்தினர் கோவையில் உள்ள தலைமை அலுவலகத்தில் 300 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...

12,522 மெட்ரிக் டன் உர இருப்பு கோவையில்; முறைகேடு செய்தால் உரிமம் ரத்து

கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடைப்பயிர் சாகுபடிக்காக 12,522 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை...

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...