டாஸ்மாக் கடைகளில் விற்பனையை முறைப்படுத்தக்கோரி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மனு



தமிழக அரசின் கீழ் இயங்கிவரும் டாஸ்மாக் மதுக்கடையில் விற்பனையை முறைப்படுத்தக்கோரி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் கோவை மாவட்டக் குழுவின் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.



அம்மனுவில் கூறியிருப்பதாவது:- ''கோவை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் 24 மணி நேரமும் எவ்வித தடையுமின்றி மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. தமிழக அரசு படிப்படியாக மது விற்பனையை குறைப்பது என்ற அறிவிப்பும் எவ்வித அவசரமும் இன்றி சாவகமாக நடைமுறைப்படுத்தப்படும் நிலையில் மதுக்கடைகளை படிப்படியாக மூடுவது ஒருபுறமிருந்தாலும் சட்டத்தை சரிவர அமல்படுத்தி சட்டப்படி குறந்தபட்சம் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டும் மதுபானம் விற்பனை செய்ய வேண்டும்.

தற்போது மது விற்பனைக்கு நிர்ணயக்கப்பட்டுள்ள கால அளவு கடைபிடிக்கப்படாததாலும், அரசு மது விற்பனையை நாளுக்கு நாள் உயர்த்த ஆர்வமிக்க திறமையான அதிகாரிகளைக்கொண்டு திட்டமிட்டு இலக்கு நிர்ணயித்து, நிர்ணயித்த அளவிற்கு மேலும் முறையற்று விற்பனை செய்வதாலும், அன்றாடம்  கூலி வேலை செய்து தங்களது வாழ்வை நடத்தும் ஏழை மக்களும், அவர்களது குழந்தைகளும் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள்.

எனவே, இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்தி மதுபானம் விற்பனை செய்யும் துறையில் அனுமதிக்கப்பட்ட காலநேரம் தவிர மற்ற நேரங்களில் மது விற்பனையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் கோவை மாவட்ட துணைத் தலைவர் சக்திவேல் கூறுகையில், 

''அதிமுக பதவிக்கு வந்தவுடன் தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில், சில கடைகள் மூடப்பட்டன. மேலும், மதுவிற்பனைக் கடைகளில் நேரமும் குறைக்கப்பட்டன. ஆனால், தற்போது எந்த டாஸ்மாக் மதுபான விற்பனைக் கடைகளிலும் நேரம் கடைபிடிக்கப்படுவதில்லை. இரவு, பகல் பார்க்காமல் கூடுதல் நேரத்தில் மது விற்பனை நடைபெருகிறது. ஆளுங்கட்சியினரே பெரும்பாலான டாஸ்மாக் கடைகளை நிர்வகித்து வருவதால் சட்டங்களை பின்பற்றுவதில்லை என கூறப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் இதில் உரிய கவணம் செலுத்தி மதுபான விற்பனை முறைகேட்டை கட்டுப்படுத்த வேண்டும்'' என்றார்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...