சொத்துவரி செலுத்தாததால் குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு - மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை

கோவை மாநகராட்சியில் சொத்துவரி உள்ளிட்டவற்றை கட்டாதவர்கள் மீது நடிவடிக்கை எடுக்க கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டிருந்தார். 

அதனடிப்படையில், கோவை மாவட்ட கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட 57-வது வார்டு, மசக்காளிபாளையம் சின்னசாமி வீதியில் வசித்து வரும் சுப்ரமணியம் என்பவர் சொத்துவரி 46 ஆயிரத்து 682 செலுத்தாமல் இருந்துவந்துள்ளார். அவரது வீட்டின் குடிநீர் இணைப்பும், தெற்கு பகுதிக்கு உட்பட்ட போத்தனூர் மணிகண்டன், திருமால்வேந்தன் சொத்து வரி 53 ஆயிரத்து 790 ரூபாய் செலுத்தாததாலும் அவர்களது குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.

இதேப்போன்று கோவை வடக்கு பகுதிக்கு உட்பட்ட கணபதி பகுதியில் செயல்படும் யுனிவர்சல் மிஷினரி ஒர்க்ஸ் சொத்து வரி ரூ.8 ஆயிரத்து 386 மற்றும், ரூ.10 ஆயிரத்து 721 செலுத்தாமலும் இருந்து வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து, அதன் குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. பொதுமக்கள் கோவை மாநகராட்சிக்கு செலுத்தவேண்டிய அனைத்து வரிகளையும் செலுத்தி ஜப்தி நடவடிக்கையினை தவிர்க்குமாறு அவர்தெரிவித்துள்ளார்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...