குறைதீர் கூட்டத்தில் 140 ஓய்வூதியர்களுக்கு நலத்திட்ட உதவிகள்- ஆட்சியர் வழங்கினார்


ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 140 பயனாளிகளுக்கு ரூ.41 லட்சம் மதிப்பீட்டிலான பணப்பயன்களுக்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வழங்கினார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாயன்று (இன்று) ஓய்வூதியர்களுக்கான குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றுது. இக்கூட்டத்தில் ஓய்வூதியர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று மனுக்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து, 140 ஓய்வூதியதார்களுக்கு ரூ.41 லட்சம் மதிப்பிலான பணப்பயன்கள் வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் கலந்து கொண்டனர். அவர்களிடமிருந்து 44 மனுக்கள் பெறப்பட்டது. 30 விண்ணப்பங்களுக்கு தீர்வு காணப்பட்டது. 14 மனுக்கள் துரித நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், தலைமை அலுவலக ஓய்வூதியத் துறை இணை இயக்குநர் சி.ராமசந்திரன், துணை இயக்குநர் மதிவாணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) ஷேசாத்திரி, மாவட்ட கருவூல அலுவலர் (பொ) டி.சி.எல்.நடராஜன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...