இந்திய மருத்துவர் சங்கத்தை கலைக்கும் மத்திய அரசைக் கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம்

இந்திய மருத்துவர் சங்கத்தை கலைத்து தேசிய மருத்துவர் சங்கத்தை உருவாக்க முயலும் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து கோவையில் இந்திய மருத்துவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய மருத்துவர் சங்கத்தை கலைக்க முயலும் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து, இந்திய மருத்துவர் சங்கத்தினர் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக கோவை புரூக் பாண்ட் சாலையில் உள்ள இந்திய மருத்துவ சங்க அலுவலகம் முன்பாக அவ்வமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட இந்திய மருத்துவ சங்கத்தை கலைத்து, தேசிய மருத்துவச் சங்கத்தை உருவாக்க மத்திய அரசு முயல்வதாகவும், அவ்வமைப்பில் 20 உறுப்பினர்களில் 15 பேரை நியமன முறையில் மருத்துவர் அல்லாதவர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். அதிகரித்து வரும் மருத்துவர்கள் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்த அவர்கள், இந்திய மருத்துவ சங்கத்தை கலைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டுமென வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...

12,522 மெட்ரிக் டன் உர இருப்பு கோவையில்; முறைகேடு செய்தால் உரிமம் ரத்து

கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடைப்பயிர் சாகுபடிக்காக 12,522 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை...

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...