கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தேங்கும் சாக்கடை நீரால் மக்கள் அவதி


கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நில அளவை துறை செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் முன்பு கடந்த சில நாட்களாக சாக்கடை நீர் வெளியேறி அப்பகுதியிலேயே தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. 

மேலும், சாக்கடை நீரை கடந்து செல்ல மரப்பலகையை தாண்டிச் செல்ல வேண்டிய நிலை உள்ளதால் இங்குள்ள கருவூல அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். கருவூல அலுவலக ஊழியர்களும் செய்வதறியாது துர்நாற்றத்தை பொறுத்துக் கொண்டு பணி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். 

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தண்ணீர் பிரச்சனை, சாக்கடை நீர் வெளியேற்றம், வாகன நிறுத்தம் பற்றாக்குறை போன்ற பல்வேறு பிரச்சனைகள் உள்ளதால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...