52-வது வார்டுப் பகுதியில் மாநகராட்சி பணிகள் குறித்து மாநகராட்சி துணை ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 52-வது வார்டுக்கு உட்பட்ட சக்தி ரோடு, காந்திபுரம், வருமான வரி மற்றும் மத்திய கலால் துறை குடியிருப்பு பகுதியில் மக்கும் குப்பையின் மூலம் உரம் தயாரிக்கும் மையத்தை மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி துவக்கி வைத்து பார்வையிட்டார்.



இதனைத்தொடர்ந்து, அப்பதியில் வசிக்கும் வீடுகளுக்கு செல்லும் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் பணிகளில் ஈடுபடுவதை அவர் ஆய்வு செய்தார்.



பின், மழைநீர் வடிகால் கால்வாயில் சுத்தம் செய்யும் பணிகளில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் ஈடுபடுவதை மாநகராட்சி துணை ஆணையர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வுகளின் போது நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், உதவி நகர்நல அலுவலர் எம்.சந்தோஷ்குமார், உதவி நகரமைப்பு அலுவலர் ஹேமலதா, உதவி ஆணையர் (பொ) மோகனசுந்தரி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...