ரயில் பயணச் சீட்டு பரிசோதகரை தொடர்பு கொள்ள உதவி எண் அறிவிப்பு

ரயிலில் பயணச் சீட்டு பரிசோதகரை பல நேரங்களில் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று பயணிகள் தரப்பில் இருந்து தெற்கு ரயில்வேக்கு புகார் வந்தது. இதனையடுத்து பயணச் சீட்டு பரிசோதகரை தொடர்பு கொள்ள பயணிகளுக்கான உதவி எண்கள் அறிவிக்கப்பட்டது.

இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

ரயிலில் உயர் வகுப்புகள் அதாவது ஏசி முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு மற்றும் மூன்றாம் வகுப்பில் பயணம் செய்பவர்கள் பயணச் சீட்டு பரிசோதகர்களை ரயில் புறப்படும் 1 மணி நேரத்துக்கு முன்பாகவே நடைமேடையிலேயே தொடர்பு கொள்ளலாம்.

படுக்கை வசதிக்கு முன்பதிவு செய்திருக்கும் பயணிகள், ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடம் முன்பாகவே பயணச் சீட்டு பரிசோதகரை தொடர்பு கொள்ளலாம்.


இதைத் தொடர்ந்து, உயர் வகுப்பு ரயில் பெட்டி பயணிகள் ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடம் முன்பாகவும், படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் 15 நிமிடம் முன்பாகவும் பயணச் சீட்டு பரிசோதகரை ரயிலிலேயே இனி எளிதில் அனுகலாம்.

அப்படியும் பயணச் சீட்டு பரிசோதகரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றால் உதவி எண்ணை அழைக்கலாம்:


தெற்கு ரயில்வே வர்த்தக பிரிவு : 044-25350308
ஹெல்ப் லைன் : 138
சென்னை கோட்டம் : 044-25354457, 9003061977
திருவனந்தபுரம் : 0471-2326484, 9567869375
சேலம் : 0427-2431010, 9600956230
பாலக்காடு : 0491-2552755, 9746763956
மதுரை : 0452-2308250, 9003862961
திருச்சி : 0431-2418992, 9003864966
தலைமை அலுவலகம், வர்த்தகப் பிரிவு
சிறப்பு அதிகாரி : 044-25354405

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...