நவாஸ் ஷெரீப் முன்னிலையில் இந்திய எல்லை அருகே பாகிஸ்தான் போர் பயிற்சி

இந்திய எல்லை அருகே பாகிஸ்தான் பிரதமர்  நவாஸ் ஷெரீப் முன்னிலையில் அந்நாட்டு ராணுவத்தினர் திடீர் போர் பயிற்சியில் ஈடுபட்டனர். ஜம்மு-காஷ்மீர், உரி தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான், இந்திய எல்லைப்பகுதிகள் மீது தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்தியாவும் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றது. இதனால் இரு நாடுகளுக்கிடையில் மீண்டும் போர் பதற்றம் நீடித்து வருகின்றது.

இந்த நிலையில்  பாகிஸ்தான் வீரரகள், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் பகவல்பூர் அருகே, தங்கள் நாட்டு பகுதியான காயிர்பூர் மற்றும் டேம்வாலி பகுதியில் திடீர் போர் பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த பயிற்சி முகாமிற்கு ராத் உல் பார்க் என பெயரிடப்பட்டுள்ளது. இப்போர் பயிற்சியில் நவீன பீரங்கிகள், ஹெலிகாப்டர்கள் மற்றும் சக்தி வாய்ந்த ஆயுதங்கள் போன்ற அனைத்தும் பயன்படுத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், இந்த போர் பயிற்சியானது பாகிஸ்தான் நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் ராணுவ தளபதி ரஸீல் ஷெரீப் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த பயிற்சியை பார்வையிட்டு நவாஸ் ஷெரீப் பேசுகையில், ‘‘பாகிஸ்தான் எந்த ஒரு சூழ்நிலை வந்தாலும்  எதிரிகளை சமாளிக்கக்கூடிய வகையில் உள்ளது என்பதை பிரதிபலிக்கும் விதமாக இந்த போர் பயிற்சியானது நடந்து முடிந்துள்ளது. அதனால் பாதுகாப்பு குறித்து  நாம் கவலைப்பட தேவையில்லை. பாகிஸ்தான் எந்த ஒரு நிலையிலும்  வலியப்போய் போர் தொடுக்காது’’ என்றார். பாகிஸ்தானின் இந்த திடீர் பயிற்சியால், எல்லையில் பாதுகாப்பு படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...