ரிசர்வ் வங்கி கவர்னர் இல்லாததால் புதிய நோட்டு அச்சடிப்பதில் 2 மாதம் தாமதம்

1000 ரூபாய் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு புதிய 2 ஆயிரம் ரூபாய், 500 ரூபாய் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டு தற்போது எல்லா இடங்களிலும் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது.

ஆனால், 500 ரூபாய் நோட்டு குறிப்பிட்ட ஒரு சில இடங்களில் மட்டும் வெளிவந்துள்ளது. தமிழ்நாடு உள்பட பல இடங்களில் 500 ரூபாய் நோட்டு இன்னும் வெளிவரவில்லை.

எனவே, சில்லறை தட்டுப்பாடு ஏற்பட்டு பணப்புழக்கம் முற்றிலும் முடங்கி உள்ளது. 2 ஆயிரம் ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் இன்னும் போதிய அளவுக்கு மக்களிடம் புழக்கத்துக்கு வராததால் மக்கள் பணம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

புதிய ரூபாய் நோட்டுகளை உரிய காலத்தில் அச்சடித்து வைக்காமல் இருந்தது தான் இதற்கு முக்கிய காரணமாகும். புதிய நோட்டுகள் அச்சடிப்பதற்கு தாமதம் ஆனதற்கு முக்கிய காரணம் ஒன்று உள்ளது. ரிசர்வ் வங்கி கவர்னர் நியமிக்கப்படாமல் இருந்ததுதான் இதற்கு காரணம் என தெரிய வந்துள்ளது.

புதிய 2 ஆயிரம் ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது என்று 6 மாதங்களுக்கு முன்பே முடிவு செய்து விட்டனர். இந்த நேரத்தில் ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த ரகுராம்ராஜன் மாற்றப்பட்டார். எனவே, புதிய ரூபாய் நோட்டில் புதிய கவர்னர் கையெழுத்திட வேண்டிய நிலை இருந்தது.

புதிய ரூபாய் நோட்டுகளை வடிவமைத்து எல்லா ஏற்பாடுகளும் தயாராக இருந்த நிலையில் புதிய கவர்னர் இல்லாததால் அந்த நோட்டுகளை அச்சடிக்க அனுப்ப முடியவில்லை. இதனால் 2 மாதமாக அந்த பணி தொடங்கப்படாமல் அப்படியே நின்றது. அதன் பிறகு புதிய கவர்னராக நியமிக்கப்பட்ட உர்ஜித் பட்டேல் செப்டம்பர் 4-ந் தேதி பதவி ஏற்று கொண்டார். அதன் பிறகு அவர் அந்த புதிய பணத்தில் கையெழுத்திட்டார்.

இதன் பின்னர் தான் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க அனுப்பப்பட்டன. இதனால் தேவை இல்லாமல் 2 மாதம் புதிய ரூபாய் நோட்டுகள் தயாரிக்கும் பணி முடங்கி விட்டது.

இந்த காரணத்தால் தான் இன்று போதிய அளவுக்கு புதிய பணத்தை அனுப்ப முடியாமல் ரிசர்வ் வங்கி தவித்து வருகிறது. புதிய ரூபாய் நோட்டில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை புகுத்தி உள்ளனர். வழக்கமாக பாகிஸ்தானில் இருந்து தான் அதிக அளவில் கள்ள நோட்டுகள் அச்சடித்து இந்தியாவில் புழக்கத்தில் விடப்படுகின்றன. ஆனால், புதிய நோட்டில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் காரணமாக இனி இது போன்ற கள்ள நோட்டுகளை அச்சடித்து வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...