ரிசர்வ் வங்கி கவர்னர் இல்லாததால் புதிய நோட்டு அச்சடிப்பதில் 2 மாதம் தாமதம்

1000 ரூபாய் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு புதிய 2 ஆயிரம் ரூபாய், 500 ரூபாய் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டு தற்போது எல்லா இடங்களிலும் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது.

ஆனால், 500 ரூபாய் நோட்டு குறிப்பிட்ட ஒரு சில இடங்களில் மட்டும் வெளிவந்துள்ளது. தமிழ்நாடு உள்பட பல இடங்களில் 500 ரூபாய் நோட்டு இன்னும் வெளிவரவில்லை.

எனவே, சில்லறை தட்டுப்பாடு ஏற்பட்டு பணப்புழக்கம் முற்றிலும் முடங்கி உள்ளது. 2 ஆயிரம் ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் இன்னும் போதிய அளவுக்கு மக்களிடம் புழக்கத்துக்கு வராததால் மக்கள் பணம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

புதிய ரூபாய் நோட்டுகளை உரிய காலத்தில் அச்சடித்து வைக்காமல் இருந்தது தான் இதற்கு முக்கிய காரணமாகும். புதிய நோட்டுகள் அச்சடிப்பதற்கு தாமதம் ஆனதற்கு முக்கிய காரணம் ஒன்று உள்ளது. ரிசர்வ் வங்கி கவர்னர் நியமிக்கப்படாமல் இருந்ததுதான் இதற்கு காரணம் என தெரிய வந்துள்ளது.

புதிய 2 ஆயிரம் ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது என்று 6 மாதங்களுக்கு முன்பே முடிவு செய்து விட்டனர். இந்த நேரத்தில் ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த ரகுராம்ராஜன் மாற்றப்பட்டார். எனவே, புதிய ரூபாய் நோட்டில் புதிய கவர்னர் கையெழுத்திட வேண்டிய நிலை இருந்தது.

புதிய ரூபாய் நோட்டுகளை வடிவமைத்து எல்லா ஏற்பாடுகளும் தயாராக இருந்த நிலையில் புதிய கவர்னர் இல்லாததால் அந்த நோட்டுகளை அச்சடிக்க அனுப்ப முடியவில்லை. இதனால் 2 மாதமாக அந்த பணி தொடங்கப்படாமல் அப்படியே நின்றது. அதன் பிறகு புதிய கவர்னராக நியமிக்கப்பட்ட உர்ஜித் பட்டேல் செப்டம்பர் 4-ந் தேதி பதவி ஏற்று கொண்டார். அதன் பிறகு அவர் அந்த புதிய பணத்தில் கையெழுத்திட்டார்.

இதன் பின்னர் தான் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க அனுப்பப்பட்டன. இதனால் தேவை இல்லாமல் 2 மாதம் புதிய ரூபாய் நோட்டுகள் தயாரிக்கும் பணி முடங்கி விட்டது.

இந்த காரணத்தால் தான் இன்று போதிய அளவுக்கு புதிய பணத்தை அனுப்ப முடியாமல் ரிசர்வ் வங்கி தவித்து வருகிறது. புதிய ரூபாய் நோட்டில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை புகுத்தி உள்ளனர். வழக்கமாக பாகிஸ்தானில் இருந்து தான் அதிக அளவில் கள்ள நோட்டுகள் அச்சடித்து இந்தியாவில் புழக்கத்தில் விடப்படுகின்றன. ஆனால், புதிய நோட்டில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் காரணமாக இனி இது போன்ற கள்ள நோட்டுகளை அச்சடித்து வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Newsletter

12,522 மெட்ரிக் டன் உர இருப்பு கோவையில்; முறைகேடு செய்தால் உரிமம் ரத்து

கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடைப்பயிர் சாகுபடிக்காக 12,522 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை...

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...