முகவரி கேட்பது போல் நடித்து பெண்ணிடம் 4 சவரன் நகை பறிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜூ. இவரது மனைவி சாந்தி (53). இவர், கடந்த வாரம் தேவம்பாளையம் பகுதியில் உள்ள தனது சகோதரர் வீட்டுக்கு வந்தார். வீட்டிற்கு  வெளியே நின்று கொண்டிருந்த போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சாந்தியிடம் முகவரி கேட்டனர். சாந்தி தான் ஊருக்கு புதிது என்று சொல்லும் போது, அந்த வாலிபர்கள் சாந்தி கழுத்தில் அணிந்திருந்த 4 சவரன் நகையை பறித்துக் கொண்டு தப்பியோடினர். இது குறித்து அவர் கோவில்பாளையம் போலீசாரிடம் புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அப்பகுதியில் பொருத்தியிருந்த சிசிடிவி காமிரக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில்  விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...