மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து கோவையில் ஏ.டி.எம் இயந்திரம் முன்பாக மலர் வளையம் வைத்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!


மத்திய அரசு 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை தகுந்த முன்னேற்பாடுகள் இல்லாமல் தடை செய்தது காரணமாக பொதுமக்களும் வியாபாரிகளும் அவதிக்குள்ளாகி இருப்பதாக கூறி மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து கோவையில் ஏ.டி.எம் இயந்திரம் முன்பாக மலர் வளையம் வைத்து போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினர்   90 பேர் கைது செய்யப்பட்டனர்.



மத்திய அரசு கடந்த 8ம் தேதி 500 ரூபாய்,1000 ரூபாய் நோட்டுகளை முடக்கியதால் பொது மக்களும், தொழில் முனைவோரும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து கோவையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எஸ்.பி.ஐ வங்கி முற்றுகை போராட்டம் நடைபெற்றது.



கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் வி.எம்.சி.மனோகரன் தலைமையில் ஓன்று கூடிய காங்கிரஸ் கட்சியினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஓன்று கூடினர். அங்கிருந்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பிய அவர்கள் ஊர்வலமாக சென்று எஸ்.பி.ஐ வங்கியை நோக்கி செல்ல முயன்றனர். போலிசார் அனுமதி மறுக்கவே மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக உள்ள எஸ்.பி.ஐ ஏ.டி.எம் மையத்திற்கு மலர் வளையம் வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது கருப்பு பணத்தை ஓழிக்க மேற்கொண்ட நடவடிக்கை வரவேற்க தக்கது என்றாலும் சரியான திட்டமிடல் இல்லாததால் பொது மக்களும், வியாபாரிகளும் கடும் அவதிக்குள்ளாகி இருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டினர். தற்போது நிலவும் பண தட்டுப்பாட்டை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

இதனையடுத்து எஸ்.பி.ஐ தலைமை அலுவலகம் நோக்கி செல்ல முயன்ற காங்கிரஸ் கட்சியினர் 90 பேரை  காவல் துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.



Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...