கோவில்களில் கட்டண தரிசன முறையை ரத்து செய்யக்கோரி இந்து சமுதாய ஒற்றுமை மையத்தினர் உண்ணாவிரதம்


கோவில்களில் கட்டண தரிசன முறையை ரத்து செய்ய வேண்டும், இந்து இயக்க தலைவர்கள் கொலை செய்யப்படுவதன் பின்னணி குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி இந்து சமுதாய ஒற்றுமை மையம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

கோவை சிவானந்தா காலனியில் வானதிசீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பல்வேறு இந்து இயக்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் போது, தமிழகத்தில் தொடர்ச்சியாக இந்து இயக்க நிர்வாகிகள் தாக்கப்படுவதும் கொலை செய்யப்படுவதும் தொடர்வதாகவும், இந்து இயக்கத் தலைவர்கள் கொலை சம்பவங்களின் பின்னணியில் இருப்பவர்கள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து, இதுவரை நடைபெற்றுள்ள பெரும்பாலான சம்பவங்களில் கொலையாளிகள் கைது செய்யப்படவில்லை எனவும் அவர்கள் குற்றம்சாட்டினர். 

மேலும், கோவில்களில் கட்டண தரிசன முறையை ரத்து செய்ய வேண்டும் எனவும், இது குறித்து பல முறை வலியுறுத்தியும் மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர். மேலும், லவ்ஜிகாத் என்ற பெயரில் இந்து இயக்க பெண்களை குறிவைத்து ஏமாற்றும் சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

Newsletter

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...

காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளில் கூட்டணி தலைவர்கள் புகைப்படம்: தெளிவான வழிகாட்டுதல் கோரிக்கை

கோவை மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் S.P. சுதன் நாயக் ராஜ், காங்கிரஸ் கட்சியின் சொந்த நிகழ்ச்சிகளில் கூட்டணி கட்சி...

Coimbatore Police Museum to Offer Free Entry on September 6 for Police Day

The Tamil Nadu Police Museum in Coimbatore will offer free entry to the public and school and college students on Septem...

தாய்லாந்து சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில் கோவை சிறுவன் ரக்‌ஷனுக்கு 2-ம் இடம்

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில், இந்தியா சார்பில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற ஒரே போட்டியாளராக ‌...