பாபர் மஸ்ஜிதை இடித்தவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கக் கோரி டிச. 6ம் தேதி கோவை விமான நிலைய முற்றுகை போராட்டம் அறிவிப்பு

பாபர் மஸ்ஜிதை இடித்தவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கக் கோரி டிச. 6ம் தேதியன்று கோவை விமான நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு அறிவித்துள்ளது.



இதுகுறித்து, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் கோவை மாநகர காவல் ஆணையரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:-

''450 ஆண்டுகாலம் முஸ்லிம்கள் தொழுகை நடத்தி வந்த பாபர் மஸ்ஜிதை 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதியன்று நீதிமன்ற உத்தரவுகளை மீறி சங்கபரிவார கும்பல் இடித்து தகர்த்தது. இடிக்கப்பட்டு 24 ஆண்டுகள் கடந்த பின்னரும் இன்றுவரை பாபர் மஸ்ஜிதை இடித்தவர்களுக்கு எந்த தண்டனையும் வழங்கப்படவில்லை.

ஆவணங்களையும், வரலாற்றுச் சான்றுகளையும் ஆராய்ந்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்காமல் பெரும்பாலான மக்களின் நம்பிக்கையை ஆதாரமாகக் கொண்டு தீர்ப்பு வழங்கியது. இது மிகப்பெரும் அநீதி ஆகும்.

இதனை கருத்தில் கொண்டு பாபர் மஸ்ஜித் இடிப்பு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும். இதனை வலியுறுத்தி வரும் டிசம்பர் 6ம் தேதியன்று காலை 10 மணியளவில் கோவை விமான நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...

காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளில் கூட்டணி தலைவர்கள் புகைப்படம்: தெளிவான வழிகாட்டுதல் கோரிக்கை

கோவை மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் S.P. சுதன் நாயக் ராஜ், காங்கிரஸ் கட்சியின் சொந்த நிகழ்ச்சிகளில் கூட்டணி கட்சி...