கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை ஆய்வு செய்து, அடிப்படை வசதிகள், உணவு வழங்கல் மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்து அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.


Coimbatore: Coimbatore மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS, மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள நகர்ப்புற வீடற்ற ஆதரவற்றோர் தங்கும் விடுதிகளை இன்று (02.09.2026) நேரில் பார்வையிட்டு விரிவான ஆய்வு மேற்கொண்டார்.



மத்திய மண்டலம் வார்டு எண் 80-க்குட்பட்ட கெம்பட்டி காலனி பகுதியில் மாநகராட்சி இடத்தில் செயல்படும் நகர்ப்புற வீடற்றோர் காப்பகத்தில் முதல் தளத்தில் 25 படுக்கைகளும், இரண்டாம் தளத்தில் 25 படுக்கைகளும் என மொத்தம் 50 படுக்கை வசதிகள் உள்ளன. தற்போது இங்கு 49 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதேபோல், தெற்கு மண்டலம் வார்டு எண் 89-க்குட்பட்ட சுண்டக்காமுத்தூர், NTP வீதியில் 50 படுக்கை வசதிகளுடன் கூடிய நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதியில் 36 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மாநகராட்சி ஆணையர் இந்த விடுதிகளில் தங்கியுள்ளவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள், அடிப்படை வசதிகள், சுகாதார நிலைமை உள்ளிட்டவை குறித்து நேரில் ஆய்வு செய்து விவரங்களை சேகரித்தார். ஆய்வின்போது விடுதிக்கான சுற்றுச்சுவர் அமைக்க உரிய திட்ட மதிப்பீடு தயாரிக்கவும், கட்டடப் பராமரிப்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், சுண்டக்காமுத்தூர் பகுதியில் ரூ.98 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள பாலத்திற்கான இடத்தையும் மாநகராட்சி ஆணையர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுகளின்போது நகர்நல அலுவலர் Dr.Subash Gandhi, உதவி ஆணையர்கள் Ganesan (மத்தியம்), Maheshkanagaraj (தெற்கு), செயற்பொறியாளர் Jegan, உதவி செயற்பொறியாளர் Saravanakumar (பொ), மண்டல சுகாதார அலுவலர் Gunasekaran, உதவி பொறியாளர்கள் Navaneethakrishnan, Anitha உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...

காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளில் கூட்டணி தலைவர்கள் புகைப்படம்: தெளிவான வழிகாட்டுதல் கோரிக்கை

கோவை மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் S.P. சுதன் நாயக் ராஜ், காங்கிரஸ் கட்சியின் சொந்த நிகழ்ச்சிகளில் கூட்டணி கட்சி...

Coimbatore Police Museum to Offer Free Entry on September 6 for Police Day

The Tamil Nadu Police Museum in Coimbatore will offer free entry to the public and school and college students on Septem...