செல்லாத நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கியதால் ஏற்பட்ட விளைவுகள் குறித்து ஆய்வுசெய்ய மத்திய குழு கோவை வந்துள்ளது


செல்லாத நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கியதால் ஏற்பட்டவிளைவுகள் குறித்து ஆய்வுசெய்ய, மத்திய குழு தமிழகம் வந்துள்ளது  

இக்குழு, கோவை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் அனைத்து துறை நிர்வாகிகளின் கருத்து கேட்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது,



'பழைய ரூபாய் நோட்டுகள்செல்லாது' என நவ., 8 இரவு மத்திய அரசு அறிவித்தது. அதனால் ஏற்பட்ட விளைவுகள்குறித்து கள ஆய்வு செய்வதற்காக நவ., 19ல், பிரதமர் மோடி 27குழுக்களை அமைத்தார். இதில், மூன்று பேர் கொண்ட குழு நேற்று தமிழகம் வந்தது. இதில், மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை கூடுதல் செயலர், மனிதவள மேம்பாட்டுத் துறை இணைசெயலர் மற்றும் மத்திய நகர்ப்புறவளர்ச்சித்துறை துணை செயலர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.



இந்நிலையில்  மத்திய குழுவில் இடம்பெற்றுள்ள மத்திய நகர்ப்புறவளர்ச்சிச்துறை துணை செயலர் ஜானகி தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அனைத்து  வங்கிகளின் உயர்அதிகாரிகள் மற்றும் அஞ்சல் துறை உயர் அதிகாரிகள், தொழிற்சங்க நிர்வாகிகள்,விவசாயிகள் ,சமூக ஆர்வலர்கள் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினர்.அப்போது, 100 ரூபாய், 2,000 ரூபாய் நோட்டுகள்புழக்கம்; பழைய ரூபாய்நோட்டுகளை மாற்ற, வங்கிகளில் செய்யப்பட்டுள்ள வசதிகள்; ஏ.டி.எம்., மையங்களில் புதியநோட்டுகளை வினியோகிக்க செய்யப்படவேண்டி எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. கோவை மாவட்ட கலெக்டர், வங்கிஅதிகாரிகள் மற்றும் அஞ்சல்துறையினருடன் ஆலோசனைநடத்திவிட்டு, டில்லி புறப்படுகின்றனர். 

இக்குழு, வரும் 25ம் தேதி கள ஆய்வுஅறிக்கையை  மத்திய அரசிடம் ஒப்படைக்க  உள்ளதாக தெரிய வருகிறது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...