கேரளாவில் இருந்து பெங்களூருக்கு கொண்டு செல்லப்பட்ட 11 லட்சம் மதிப்புடைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

கேரளாவில் இருந்து பெங்களூருக்கு உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட 11 லட்சம் ரூபாய் மதிப்பிலான பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை கோவை மாவட்ட காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

கோவை மாவட்டம் சூலூர் காவல்துறையினர் நீலம்பூர் புறவழிச் சாலையில் புதனன்று (இன்று) அதிகாலை வழக்கமான வாகனத் தனிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கேரள மாநிலத்தில் இருந்து வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை மேற்கொண்ட போது, அதில் 11 லட்சத்து ஐம்பது ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பழைய 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் இருப்பது தெரியவந்தது. 

இதனைத்தொடர்ந்து, காரில் பணத்தை கொண்டு வந்த செந்தில்குமார், அங்குசாமி ஆகியோரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் உரிய ஆவணங்கள் இன்றி கேரளாவில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு பணத்தை கொண்டு செல்வது தெரியவந்தது. 

இதையடுத்து, அந்தப் பணத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர், விசாரணைக்கு பின்னர் வருமான வரித்துறையினரிடம் பணத்தை ஒப்படைத்தனர். 

பணத்தை கொண்டு சென்ற இருவரிடமும் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், இருவரும் பெங்களூர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், அங்கு ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் தெரியவந்துள்ளது. 

இருவரும் எதற்காக பணத்தை கொண்டு சென்றனர் என்பது குறித்தும், யாராவது கொடுத்து அனுப்பினார்களா அல்லது கருப்பு பணமா என்பது குறித்தும், செல்லாது என்பதால் ரூபாய் தாள்களை மாற்ற முயன்றார்களா என்பது குறித்தும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...