சாலை விபத்து குறித்து விழிப்புணர்வு நாடகம்


கோவை: புரூக் பீல்ட்ஸ் வணிக வளாகத்தில் இன்று மாலை பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து ரூட்ஸ் நிறுவனம் மற்றும் கோவை மாநகர போக்குவரத்து சார்பில் விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது. கோவை மாநகர துணை ஆணையர் சரவணன் தலைமை தாங்கினார்.



இந்நாடகம், ரூட்ஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் இணைந்து பயணத்தில் விபத்துக்கள் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை நாடகத்தின் மூலம் பொதுமக்களுக்கு விளக்கினர். அதில், பயணம் செய்யும் போது, மது அருந்தி விட்டு பயணம் செய்வது, தலைக்கவசம் அணியாமல் பயணம் செய்வது, கைபேசி பேசிக்கொண்டு பயணம் செய்வது, சீட் பெல்ட் அணியாமல் பயணம் செய்வது போன்ற பல்வேறு விதமான செயல்களால் சாலை விபத்து ஏற்படுகிறது. என்பதை நாடகத்தின் மூலம் விளக்கினர்.







பின்னர், இது குறித்து கோவை மாநகர துணை ஆணையர் சரவணன் பேசுகையில், இந்நாடகத்தின் மூலம் பொதுமக்கள் சாலை பயணத்தின் போது தங்களது தவறை சரிசெய்து கொள்ளவேண்டும் என்றும் சாலை விதிகளை பின்பற்றியும் விலைமதிப்பில்லா இந்த உயிரை காப்போம் என்றும் கூறினார்.



இதில், ரூட்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் கவிஞர் கவிதசன், கோவை மாநகர உதவி ஆணையர் மாகுடபதி, போக்குவரத்து மேற்கு காவல் ஆய்வாளர் சதாசிவம், கிழக்கு காவல் ஆய்வாளர் ஐயர்சாமி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சரவணன் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...

காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளில் கூட்டணி தலைவர்கள் புகைப்படம்: தெளிவான வழிகாட்டுதல் கோரிக்கை

கோவை மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் S.P. சுதன் நாயக் ராஜ், காங்கிரஸ் கட்சியின் சொந்த நிகழ்ச்சிகளில் கூட்டணி கட்சி...