கோவையில் திமுகவினர் 1000 ரூபாய் நோட்டின் மாதிரியை பாடை கட்டி ஆர்ப்பாட்டம்!

கோவையில் மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் நடத்தப்பட்ட மனித சங்கிலி போராட்டத்தில் ஆயிரக்கணக்கான திமுகவினர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது திமுகவினர் 1000 ரூபாய் நோட்டின் மாதிரியை பாடை கட்டி எடுத்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.



பழைய 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த 8ம் தேதி மத்திய அரசு அறிவித்தது.இந்த அறிவிப்பினால் அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டதுடன், பழைய நோட்டுகளை மாற்றுவதற்கு மக்கள் அலைந்து திரியவேண்டி இருந்தது. இந்நிலையில் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து அரசியல் கட்சிகளும், தொழிற்சங்கத்தினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஓரு பகுதியாக தி.மு.க சார்பில் இன்று மாநிலம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகின்றது. கோவையில் நஞ்சப்பா சாலையில் துவங்கி கிராஸ்கட் வீதி வரை திமுகவினர் திரண்டு நின்று மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி தலைமையில் நடந்த இந்த மனித சங்கிலி போராட்டத்தில் மாநகர் முழுதும் இருந்து திமுகவினர் கலந்து கொண்டனர். அப்போது பேட்டியளித்த பொங்கலூர் பழனிச்சாமி, மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் பொதுமக்களும் வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் விரைவில் 500 ரூபாய், 100 ரூபாய், 50 ரூபாய் அதிகளவு புழக்கதில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர், 1000 ரூபாய் நோட்டின் மாதிரி ஒன்றை பாடையில் கட்டி எடுத்து வந்து சங்கு ஊதியும், மேளம் முழங்கவும் ஒப்பாரி வைத்தனர். இதனால் போராட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.



Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...