பிரபாகரன் சுவரொட்டியை அச்சடித்தால் வழக்கு போடுவோம் என்று போலீசார் மிரட்டியதாக புகார்

மறைந்த தமிழீழ விடுதலை போராட்டத்த்தின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் விழாவுக்கான சுவரொட்டியை அச்சடித்தாலும், ஒட்டினாலும் வழக்கு போடுவோம் என்று போலீசார் மிரட்டுவதாக தமிழர் விடியல் கட்சியினர் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தனர். 

இது குறித்து அந்த மனுவில் கூறப்பட்டதாவது :- 

பிரபாகரனின் உருவப்படத்தை அச்சடிக்க கோவையில் தான் அதிக கெடுபிடி நிலவுகிறது. விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்படிருந்தாலும் அதன் தலைவர்கள் பற்றி பிரச்சாரம் மேற்கொள்ளலாம் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் போலீசார் அச்ச்கங்களில் புகுந்து மிரட்டுவது அடக்குமுறையை காட்டுகிறது. எனவே, மற்ற மாவட்டங்களை போல எங்களுக்கும் பிரபாகரனின் உருவம் பதித்த சுவரொட்டியை அச்சடிக்கவும், சுவரில் ஒட்டவும்  அனுமதி அளிக்க வேண்டும். 

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டது.

Newsletter

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...

காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளில் கூட்டணி தலைவர்கள் புகைப்படம்: தெளிவான வழிகாட்டுதல் கோரிக்கை

கோவை மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் S.P. சுதன் நாயக் ராஜ், காங்கிரஸ் கட்சியின் சொந்த நிகழ்ச்சிகளில் கூட்டணி கட்சி...