முழுமையான ஊதியம் வழங்கக் கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்ததைத் தொடர்ந்து நாடு முழுவதும் அன்றாட செலவுகளுக்கு பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். பணப் பரிவர்த்தனையும் கட்டுப்பாட்டில் உள்ளதால் நிறுவனங்களில் ஊழியர்களுக்கு ஊதியம் தருவதில் பிரச்சனைகள் நிலவி வருகிறது.

அதன்படி, போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தற்போது மாத ஊதியமாக 3 ஆயிரம் ரூபாய் மட்டுமே ரொக்கமாக தரப்பட்டுள்ளது. மீதி தொகை ஊழியர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதில் பாதித் தொகை மட்டுமே ஊழியர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், முழுமையான ஊதியத்தை உடனடியாக தரவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.





அதன் ஒரு பகுதியாக கோவை உக்கடம் அரசு போக்குவரத்து பேருந்து பனிமனையில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஊழியர் மேற்கொண்ட பணிக்கான ஊதியத்தை உடனடியாக முழுத் தொகையினை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...