கே.எம்.சி.எச் நிர்வாகத்தால் ஆக்கிரமிக்கப்படும் நிலத்தை மீட்டுத்தரக் கோரி காவல் ஆணையரிடம் புகார்


கோவை நேருநகர் பகுதியைச் சேர்ந்தவர் நஞ்சப்பன். இவரது நிலத்தினை கே.எம்.சி.எச் நிர்வாகத்தினர் ஆக்கிரமிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், இதனை தடுத்த அவருக்கு கொலை மிரட்டல் விடுவதாகவும் வெள்ளியன்று (இன்று) கோவை மாவட்ட காவல் ஆணையரைச் சந்தித்து மனு ஒன்றினை அளித்தார்.



இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் நஞ்சப்பன் கூறியதாவது:-

கடந்த 1991-யில் என்.ஜி.பி கல்லூரியின் பின்புறத்தில் உள்ள 68 சென்ட் இடத்தினை நான் வாங்கினேன். அப்போது கே.எம்.சி.எச் நிறுவனத்தினர் எங்களது இடத்தின் அருகே சுற்றுச் சுவர் கட்டத் துவங்கினர். அதில், கூடுதலாக சுமார் 10 சென்ட் அளவிலான இடத்தினை ஆக்கிரமிக்கும் வகையில் சுற்றுச் சுவர் கட்டும் பணி நடைபெற்றது.

இதுதொடர்பாக, பீளமேடு காவல் நிலையத்தில் புகாரும், நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டதைத் தொடர்ந்து, கே.எம்.சி.எச் சுற்றுச் சுவர் கட்டும் பணியை நிறுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், தொடர்ந்து இந்த இடத்தில் சுற்றுச் சுவர் கட்டும் பணியினை மேற்கொள்ள மாட்டோம் என அப்பணியில் ஈடுபட்டிருந்தோரிடம் காவல் துறை சார்பில் எழுதியும் வாங்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது மீண்டும் அந்த இடத்தில் சுற்றுச் சுவர் கட்டும் பணியில் கே.எம்.சி.எச் நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனை நிறுத்தச் சொன்ன எனது மனைவி சரஸ்வதியை தகாத வார்த்தையில் திட்டி, எனக்கும் கொலை மிரட்டல் விடுத்தனர்.

நாங்கள் பல்வேறு சிரமங்களை அனுபவித்து உழைத்து வாங்கிய இந்த இடத்தினை கேஎம்சிஎச் நிறுவனத்தில் பணிபுரியும் தண்டபானி, சிவகுமார், நல்லதம்பி ஆகியோர் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சிப்பதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது'' என தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...