குறிச்சி குளத்தில் கழிவுகள் கொட்டிய வாகனத்தை சிறைபிடித்த பாதுகாப்பு இயக்கத்தினர்


கோவை மாவட்டம் பொள்ளாச்சி சாலை சுந்தராபுரம் அருகே அமைந்துள்ளது குறிச்சி குளம். சரியான மழைப்பொழிவு இல்லாததாலும், ஆகாயத் தாமரைகளின் அதிகப்படியான வளர்ச்சியினாலும் இக்குளம் வரண்டு காணப்படுகிறது. தற்போது, பல தொழிற்சாலை நிறுவனத்தினர் தங்களது கழிவுகளை இக்குளத்தில் கொட்டி வருவதாலும் சுகாதாரமின்றி காணப்படுகிறது. 

கடந்த சில மாதங்களுக்கு முன்புதான், இந்த குறிச்சி குளத்தின் கரையோரம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பகுதிகள் மீட்கப்பட்டு, குளம் தூர்வாரப்பட்டது. 

இந்நிலையில், இன்று குறிச்சி குளத்தில் வாகனம் மூலம் தொழிற்சாலைக் கழிவுகளை கொட்ட முற்பட்டனர். அதனைக் கண்ட குறிச்சி குளம் பாதுகாப்பு இயக்கத்தினர் கழிவுகளை கொட்டிய அந்த வாகனத்தை சிறை

பிடித்து பொதுப்பணித் துறைக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.





இதைத்தொடர்ந்து, சுமார் மூன்று மணி நேரம் கடந்தும் எந்த அதிகாரியும் அப்பகுதிக்கு வராததால் குப்பை கொட்டிய நபரிடமே அதனை எடுக்க வைத்து, பின் எச்சரித்து அனுப்பப்பட்டது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...