மாற்றுத் திறனாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்க அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிசியோதெரபி மருத்துவர்களை நியமிக்க வேண்டும் - கோயமுத்தூர் பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் வேண்டுகோள் .


உலகம் முழுவதும் இன்று மாற்றுத் திறனாளிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. அதனையொட்டி கோயமுத்தூர் பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு அளிக்க  தமிழக அரசு ஓவ்வொரு ஆரம்ப சுகாதார நிலத்திலும் குறைந்த பட்சம் ஒரு பிசியோதெரபி மருத்துவரை நியமிக்க வேண்டும். 

கடந்த 2011 ஆண்டு மாற்றுத் திறனாளிகள் கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 5,436,604 பேரும் இதில் தமிழகத்தில் 287241 பேரும் கை, கால் இழப்பு அல்லது செயலிழப்பினால் உடல் ஊனம் அடைந்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளனர். இதில் பிறக்கும் போதே ஏற்படும் உடல் ஊனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மிக அதிகம். பிறப்பு ஊனத்தை ஆரம்ப காலத்தில் கண்டறிந்து அவர்களுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பதன் மூலமாக குணப்படுத்த முடியும். அதேபோல் விபத்தினால் ஏற்படும் மூளை பாதிப்பு, முதுகு தண்டுவட பாதிப்பு, கை மற்றும் கால் இழப்பு போன்றவற்றால் ஏற்படும் உடல் ஊனத்தையும் பிசியோதெரபி மருத்துவதின் மூலம் அவர்களின் மாற்று திறனை மேம்படுத்தி மற்றவர்களை போல் இயல்பு வாழ்க்கையை வாழ செய்ய முடியும். இவ்வாறு மாற்று திறனாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் பிசியோதெரபி மருத்துவர்களை ஓவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையங்களிளும் நியமிப்பதன் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்க முடியும். 

பிறப்பு ஊனத்தை தடுக்க தமிழக அரசு பொது மக்களிடம் ஊனத்திற்கான காரணம் குறித்தும் அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். 

மாற்றுத் திறனாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்க அனைத்து மாவட்டங்களிலும் பிசியோதெரபி மருத்துவர்கள் தலைமையில் மறுவாழ்வு மையம் அமைக்க படவேண்டும்.

மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு திறமைகளை ஊக்கபடுத்த அனைத்து மாவட்டங்களிலும் மாற்றுதிறனாளிகளுக்கான தனி விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும்.அதில் மாற்றுத் திறனாளிகளை அவர்கள் விரும்பும்  விளையாட்டுக்கு ஏற்றால் போல் உடலை தகுதி படுத்த பிசியோதெரபி மருத்துவர்களை நியமிக்க வேண்டும். 

இதன் மூலம் கடந்த ரியோ பாரா ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்ற திரு.மாரியப்பன் அவர்களை போன்ற  சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்க முடியும். இவ்வாறு கோயமுத்தூர் பிசியோதெரபி மருத்துவர்கள் சங்க செயலாளர் டாக்டர். ராஜேஸ் கண்ணா கூறியுள்ளார்.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...