மாற்றுத் திறனாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்க அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிசியோதெரபி மருத்துவர்களை நியமிக்க வேண்டும் - கோயமுத்தூர் பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் வேண்டுகோள் .


உலகம் முழுவதும் இன்று மாற்றுத் திறனாளிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. அதனையொட்டி கோயமுத்தூர் பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு அளிக்க  தமிழக அரசு ஓவ்வொரு ஆரம்ப சுகாதார நிலத்திலும் குறைந்த பட்சம் ஒரு பிசியோதெரபி மருத்துவரை நியமிக்க வேண்டும். 

கடந்த 2011 ஆண்டு மாற்றுத் திறனாளிகள் கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 5,436,604 பேரும் இதில் தமிழகத்தில் 287241 பேரும் கை, கால் இழப்பு அல்லது செயலிழப்பினால் உடல் ஊனம் அடைந்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளனர். இதில் பிறக்கும் போதே ஏற்படும் உடல் ஊனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மிக அதிகம். பிறப்பு ஊனத்தை ஆரம்ப காலத்தில் கண்டறிந்து அவர்களுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பதன் மூலமாக குணப்படுத்த முடியும். அதேபோல் விபத்தினால் ஏற்படும் மூளை பாதிப்பு, முதுகு தண்டுவட பாதிப்பு, கை மற்றும் கால் இழப்பு போன்றவற்றால் ஏற்படும் உடல் ஊனத்தையும் பிசியோதெரபி மருத்துவதின் மூலம் அவர்களின் மாற்று திறனை மேம்படுத்தி மற்றவர்களை போல் இயல்பு வாழ்க்கையை வாழ செய்ய முடியும். இவ்வாறு மாற்று திறனாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் பிசியோதெரபி மருத்துவர்களை ஓவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையங்களிளும் நியமிப்பதன் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்க முடியும். 

பிறப்பு ஊனத்தை தடுக்க தமிழக அரசு பொது மக்களிடம் ஊனத்திற்கான காரணம் குறித்தும் அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். 

மாற்றுத் திறனாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்க அனைத்து மாவட்டங்களிலும் பிசியோதெரபி மருத்துவர்கள் தலைமையில் மறுவாழ்வு மையம் அமைக்க படவேண்டும்.

மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு திறமைகளை ஊக்கபடுத்த அனைத்து மாவட்டங்களிலும் மாற்றுதிறனாளிகளுக்கான தனி விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும்.அதில் மாற்றுத் திறனாளிகளை அவர்கள் விரும்பும்  விளையாட்டுக்கு ஏற்றால் போல் உடலை தகுதி படுத்த பிசியோதெரபி மருத்துவர்களை நியமிக்க வேண்டும். 

இதன் மூலம் கடந்த ரியோ பாரா ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்ற திரு.மாரியப்பன் அவர்களை போன்ற  சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்க முடியும். இவ்வாறு கோயமுத்தூர் பிசியோதெரபி மருத்துவர்கள் சங்க செயலாளர் டாக்டர். ராஜேஸ் கண்ணா கூறியுள்ளார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...