தவறான வதந்திகளை பரப்பும் செய்தியாளர் மீது நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம், வடவள்ளி பகுதிகளைச் சேர்ந்த தொழுநோயால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு உதவி செய்து வரும் சுகாதார மையம் குறித்து தவறான வதந்திகளை பரப்பும் செய்தியாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



இதுகுறித்து அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

தொழு நோயால் பாதிக்கப்பட்ட நாங்கள் சுமார் 125 குடும்பத்தினர் தங்களது குடும்பத்தினரால் ஒதுக்கப்பட்டு கோவை வடவள்ளி அருகே கடந்த 40 வருடமாக வசித்து வருகிறோம். நாங்கள் வசிக்கும் பகுதியின் அருகில் தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களுககு உதவி செய்யும் வகையில் கிராம சமூக சுகாதார மையம் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது.

அந்த மையத்தின் மூலமாக எங்களுக்கு மாதந்தோறும் உணவுப் பொருட்கள், மருத்துவ வசதி மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளுக்கு படிப்பு வசதி அனைத்தும் தற்போது வரை செய்துவருகிறார்கள்.

தற்போது எங்களுக்கு உதவி செய்யும் சுகாதார மையத்தின் மீது வி.சியாம் என்பவர் தவறான வதந்திகளை செய்தி பத்திரிகையிலும் மற்றும் சமூக வலைதளத்திலும் பரப்பி உள்ளார். இதனால், 125 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

ஆகவே, சியாம் மீதும், அந்த செய்தி பத்திரிகை நிருபர் மீதும் கோவை மாவட்ட ஆட்சியர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...