மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் - உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி


மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதால் சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமெனவும், ஜெயலலிதாவிற்கு சொந்தமான சொத்துகளை அரசுடமையாக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி வழக்கு தொடர உள்ளதாக உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற வழக்கறிஞரான கிருஷ்ணமூர்த்தி கோவையில் செய்தியாளர்களிடம் கூறும்போது, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது முறையான சிகிச்சை அளிக்கதாதலேயே உயிரிழந்து இருப்பதாகவும், ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு மர்மங்கள் இருப்பதால் சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமெனவும் தெரிவித்தார்.

ஜெயலலிதாவிற்கு சொந்தமான 'வேதா இல்லம்' உள்ளிட்ட சொத்துக்களை அரசுடமையாக்க வேண்டுமெனவும், இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாகவும் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார். ஜெயலலிதாவின் தோழி சசிகலா அதிமுக கட்சி மற்றும் சொத்துக்களை அபகரிக்க முயல்வதாகவும் குற்றம்சாட்டிய அவர், அதிமுக பொதுச்செயலளாராக மூத்த தலைவர்களான பி.ஹெச்.பாண்டியன், பண்ரூட்டி ராமசந்திரன் உள்ளிட்டோரில் ஒருவரை நியமிக்க வேண்டுமென தெரிவித்தார். 

ஜெயலலிதா உடல்நிலை குறித்த உண்மைகளை மறைத்த அப்போல்லா மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி மீது சட்ட பூர்வமாக நோட்டீஸ் அனுப்ப உள்ளதாகவும், முறையான சிகிச்சை அளிக்காமல் உயிரிழப்பிற்கு காரணமான சசிகலா உள்ளிட்டோர் மீது வழக்கு தொடர உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...