ஓ எல் எக்ஸ்-யில் கார் விற்பனைக்கு என கூறி மோசடியில் ஈடுபட்ட 7 பேர் கைது



கோவை மாவட்டம், நஞ்சுண்டாபுரம் சாலை ஸ்ரீபதி நகரைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி அருண்பாபு (60). கடந்த மாதம் 27ம் தேதியன்று (OLX) ஓஎல்எக்ஸ்-யில் கார் ஒன்றின் விற்பனைக்கான விளம்பரத்தினை பார்த்துள்ளார். அதன் விலை 4.5 லட்சமாகும் . 

இதைத்தொடர்ந்து அந்த கார் விளம்பரத்தினை பதிவிட்டவர்களுக்கு தொலைபேசியில் அழைத்து விசாரிக்கையில் அவர்கள் முன்தொகையாக 5 ஆயிரம் ரூபாயினை வங்கிக் கணக்கில் செலுத்துமாறு கூறியுள்ளனர். அருண்பாபுவும் அந்த தொகையினை செலுத்தியுள்ளார்.

பின், அந்த நபர்களிடம் இருந்து எவ்வித தகவலும் அருண்பாபுவிற்கு வரவில்லை . தொடர்ந்து அந்த தொலைபேசி எண்ணும் அனைத்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அருண்பாபு இதுகுறித்து கோவை மாவட்ட சைபர் கிரைமில் கடந்த 31ம் தேதியன்று புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து சைபர் கிரைம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் பொள்ளாச்சியை சேர்ந்த நரேஷ் (22), செரிஃப் (22), அபுதாகிர் (22), முஸ்தப்பா (21), முசாதிக் (21), சம்ருதின் (19) மற்றும் மதினா பேகம் (29) ஆகிய 7 பேர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. 

இதையடுத்து, அந்த 7 பேரையும் கைது செய்த காவல் துறையினர் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் இதுபோன்று போலியான விளம்பரங்கள் கொடுத்து பலரிடம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்த ஒரு கார் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். 

இந்த 7 பேரின் புகைப்படங்களும் இன்று மாலை 5 மணியளவில் வெளியிடவுள்ளதாக சைபர் கிரைம் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...