மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல்உறுப்பு தானம் மூலம் 5 பேருக்கு மறுவாழ்வு

சேலம் மாவட்டம், தாதாபுரம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடாசலம்(28), தந்தை கந்தசாமி – விவசாயி மற்றும் தாயார் சரோஜா அவர்களுடன் வசித்து வந்தார். வெங்கடாசலம் கடந்த 7-ம் தேதி காலை 11 மணியளவில் திருப்பூரில் உள்ள அவர் வேலை செய்யும் பனியன் கம்பெனியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். பெருந்துறை மெயின் ரோடு அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக எதிரே வந்து கொண்டிருந்த பஸ் கட்டுப்பாட்டை இழந்து இவரது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் வெங்கடாசலம் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் இவர் வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட் அணியவில்லை. உடனடியாக அவர் ஈரோடு கே.எம்.சி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் அவரது உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில் 7-ம் தேதி மாலை 5.00 மணியளவில் அவர் மூளைச்சாவு அடைந்ததாக கே.எம்.சி.எச் மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவர்களும் உறுதி செய்தனர்.

அதனை தொடர்ந்து, தாதாபுரம் பஞ்சாயத்து தலைவர் அரசி மாதையன் அறிவுரையின்படி, வெங்கடாசலம் குடும்பத்தார், அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர். அதன்படி அவரது உடல் உறுப்புகள் தானம் செய்ய கோவையிலுள்ள கே.எம்.சி.எச் மருத்துவமனைக்கு 08.12.16-ம் தேதியன்று கொண்டுவரப்பட்டது.இதன்படி வெங்கடாசலம் அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு, கல்லீரல் மற்றும் இரு சிறுநீரகங்கள் கே.எம்.சி.எச் மருத்துவமனைக்கும், கண்கள் கோவையிலுள்ள தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் மருத்துவமனையின் தலைவர் நல்ல பழனிச்சாமி கூறுகையில்; மக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்து அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஒருவர் இறந்த பிறகு அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டால் அது பலரது உயிரைக் காப்பாற்ற உதவும். உடல் உறுப்பு தானம் வழங்கிய வெங்கடாசலம் குடும்பத்தாருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...