கோவையில் தென்னிந்திய அளவிலான ஹயாஸிகா கராத்தே சாம்பியன் போட்டி துவக்கம்

ஹயாஸிகா கராத்தே அமைப்பின் தென்னிந்திய அளவிலான கராத்தே சாம்பியன் போட்டி இன்று கோவையில் தெலுங்குபாளையம் பிரிவில் உள்ள மிட்லேண்ட் ரெசிடென்சியில் நடைபெற்றது. இப்போட்டியில் ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமத்தின் அறங்காவலர் எஸ்.மலர்விழி சிறப்பு விருந்தினராக பங்கேற்று துவக்கி வைத்தார்.



இதுகுறித்து ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமத்தின் அறங்காவலர் எஸ்.மலர்விழி கூறியதாவது:-

உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு விளையாட்டுகளின் பயிற்சிகளில் தினமும் தொடர்ந்து ஈடுபட வேண்டும். விளையாட்டுப் போட்டிகள், கராத்தே போன்ற பல விளையாட்டுப் போட்டிகளில் குழந்தைப் பருவத்தில் இருந்து பங்கேற்க வேண்டும். உடல் வலிமையே மன வலிமையைக் கொடுக்கும். மேலும், ஆரோக்கியமான வாழ்க்கைக்கு கராத்தே போன்ற பயிற்சிகள் மிகவும் உதவும்.



உடல் ஆரோக்கியத்தை நாம் பேணிக்காக்க வேண்டும். இப்பயிற்சிகள் நல்ல உடல் வலிமை, ஆரோக்கியம், சுறுசுறுப்புடன் செயல்பட உதவும். நமது செயல்களில் திறனை மேம்படுத்த பல உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டும்'' என்றார்.



இந்நிகழ்ச்சியில், ஜப்பான் ஹயாஸிகா கோவை அமைப்பின் நிர்வாகி மாதம்பட்டி கே.தங்கவேலு கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இதில், இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் மீனாட்சி சுந்தரம், வடிவேலம்பாளையம் வி.பி.காளியப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



ஜப்பான் ஹயாஸிகா கராத்தே இந்திய அமைப்பின் பொதுசெயலர் சென்செய் எஸ்.ரமேஷ் குமார் வரவேற்புரையாற்றினார். இக்கமிட்டியின் மாவட்ட பொறுப்பாளர் நாகராஜ் நன்றியுரையாற்றினார்.



இப்போட்டியில், இந்திய அளவில் மொத்தம் 700 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இதில், வெற்றிபெரும் நபர்களுக்கு அகில இந்திய ஜிம்னாஸ்டிக் அமைப்பின் துணைத் தலைவர் ஏ.பி.முருகானந்தம் தலைமையில் பரிசுக்கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...