வரலாற்றை சுமந்துநிற்கும் கொடநாடு மைல்கல்


முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தமிழகத்தையே கவலையில் ஆழ்த்தியுள்ளது . இந்த மறைவை சற்றும் ஏற்கமுடியாமல் உள்ளனர் கொடநாடு எஸ்டேட் பகுதியினர் மற்றும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சென்னைக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் அதிகம்  இருந்தது நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொடநாடு எஸ்டேட் தான். பலமுறை ஓய்வுக்காக கொடநாடு வந்த ஜெயலலிதா, பின்பு ஓய்வுக்காக மட்டுமல்லாமல் கொடநாட்டிலிருந்தே அரசு அலுவல்களையும் சில சமயங்களில் கவனித்து வந்தார்.

எங்கள் அம்மா ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி கொடநாட்டின் பக்கம் வந்தாலே சகமனிதராகிவிடுவார் என புகழ் மாலை சூடுகின்றனர் எஸ்டேட்வாசிகள். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இந்த எஸ்டேட்டை வாங்கிய பின்னர்தான் சுற்றுவட்டார கிராமத்தில் உள்ள எல்லோருக்கும் வேலை கிடைத்தது.



ஒருகட்டத்தில் கொடநாடு எஸ்டேட்டுக்கு கொடநாடு, கெரடாமட்டம், சுண்டட்டி, ஈளாடா, கஸ்தூரிபா நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களும் ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர், கைகாட்டி உள்ளிட்ட கிராமங்களிலிருந்தும் ஏராளமானோர் இங்கு பணிக்காக சென்று வருகின்றனர் என்றனர் அப்பகுதி மக்கள்.

தமிழக மக்களிடையே ஜெயலலிதா என்ற ஒரு பெயரை கூறியவுடன் அடுத்தபடியாக நினைவுக்கு வருவது கொடநாடு தான். ஜெயலலிதாவின் அடையாளமான பகுதியாக கொடநாடு எஸ்டேட்டும் அவரது வீடும் தற்போது அப்பகுதி மக்களால் ஒரு நினைவுச் சின்னமாக திகழ்ந்து வருகிறது. ஜெயலலிதாவின் வருகைக்காக பசுமையான மலைக்காடு சாலை, இயற்கையின் காற்று, ரம்மியமான பறவைகளின் இசை என்று கொடநாடு சாலை எப்போதும் காத்துக்கிடக்கும். ஒவ்வொரு முறை கொடநாட்டிற்கு ஜெயலலிதா செல்லும் போதும் அந்த சாலையே ஒரு திருவிழாக் கோலமாகிவிடும்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் காலடிச் சுவடுகளும், காலச் சுவடுகளும் இன்னும் கொடநாட்டில் வாழ்ந்துகொண்டுதான் உள்ளது. ஒவ்வொரு முறை ஜெயலலிதா கடந்து சென்ற கொடநாடு மைல்கல்லும் தற்போது அவரது வருகைக்காக காத்துக்கிடக்கிறது. அவரது மறைவை மனிதர்களாலே ஏற்றுக்கொள்ள முடியாத இக்கட்டத்தில் மைல்கல் ஏற்றுக்கொள்ள வைப்பது முடியாத காரியமே...

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...